- Advertisement -
பொது பலன்

வக்ரத்தில் குரு – 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்

முழு சுப கிரகமான குரு பகவான் இப்போது துலா ராசியில் வக்கிர கதி அடைவதால், சில ராசியினருக்கு சற்று பாதகமான பலன்களும், வேறு சில ராசியினருக்கு சாதகமான பலன்களும் ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. இந்த வக்கிர குரு ஆணி மாதம் நிவர்த்தியடைவதால், அதுவரை 12 ராசிக்கும் என்னென்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
உங்கள் ராசிக்கு குரு பகவான் துலாம் ராசியில் இருந்தாலும் வக்கிரகதியிலிருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல்நிலை சற்றே சோர்வடையும். பணம் சம்பந்தமான விவகாரங்களில் சற்று கவனம் தேவை. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். விரும்பிய பணிஇடமாற்றங்கள் கிடைத்தாலும் சற்றே அலைச்சலை உண்டாக்கும்.

ரிஷபம் :
இக் குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். நீதிமன்ற வழக்குகள் தேர்வு உங்களுக்கு சாதகமாக அமையும். தொடக்கத்தில் சிறிது உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டாலும் பிறகு நல்ல ஆரோக்கியம் ஏற்படும். விவசாயத்தில் லாபமேற்படும். குடும்பத்தில் இந்தாண்டு சுபகாரியங்கள் நிகழும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:
உங்கள் ராசிக்கு குரு ஐந்தாமிடத்திலிருந்தாலும் வக்கிரகதியிலிருப்பதால் பேச்சிலும், நடத்தையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.பெண்களால், குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நட்பை தவிர்ப்பதன் மூலம் கல்வியில் மேம்படலாம். கணவன்-மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ள வேண்டும்.

கடகம்:
குருபகவானின் வக்கிர கிரக பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திலிருந்தாலும், உங்களுக்கு நற்பலன்களை கொடுப்பார். குழந்தைப் பேறில்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். அசையும், அசைய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சிறு உடல்நல பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அரசியலில் இருப்போர்க்கு பதவிகள் கிடைக்கும்.

கடக ராசி குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

சிம்மம்:
மூன்றாமிட குருபெயர்ச்சி உங்களுக்கு சமமான பலன்களை தரும். உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சியுண்டாகும். மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்களை முற்றிலும் அடைத்துவிடக்கூடிய அமைப்பு உண்டாக்கும்.

கன்னி :
குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்திலிருப்பதால், சற்று பாதகமான பலன்களை ஏற்படுத்தும். உங்களுக்கு அர்தாஷ்டமச்சனி நடப்பதால் அலைச்சல், மனஇறுக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். பெண்களின் உடலாரோக்கியம் சற்று பாதிக்கப்படும். கடன் விவகாரங்களிலில் சற்று தடை ஏற்பட்டாலும் இறுதியில் சுமூக தீர்வு ஏற்படும்.

துலாம்:
குரு உங்கள் ராசியிலேயே இருப்பதால் உங்கள் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பொருளாதார நிலை மேலோங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொடங்கிய அணைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும். மாணவர்கள் மிகச்சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவார்கள். பொது வாழ்வில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும்.

விருச்சகம்:
உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்து குரு மிகப்பெரிய நன்மைகளை செய்யாவிட்டாலும் தீமைகள் பெரிதாக இல்லை. உங்கள் ராசிக்கு ஏழரைச்சனி நடந்தாலும் உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். பேசும் போது கவனமாக இருக்கவும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெண்கள் வழியில் லாபமேற்படும். பணவரவுகளில் சிறு தடங்கலேற்பட்டாலும், பாதிப்புகள் ஏற்படாது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

தனுசு:
உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்து குரு மிகப்பெரிய அளவில் நன்மைகளை செய்ய வாய்ப்பில்லை. எதிலும் உணர்ச்சிவசப்படுவதை தவிக்க வேண்டும். குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். பணியிடங்களிலி உயரதிகாரிகளின் நெருக்கடியால் மனநிம்மதி கெடும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏற்படாது. விவசாயம் செய்வோர் சுமாரான லாபத்தை பெறுவார்கள்.

மகரம்:
பத்தாமிட குரு உங்களுக்கு பல நற்பலன்களை அளிப்பார். வீடு, வீட்டு மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தூர பயணங்களை தவிர்ப்பது நலம். கணவன்-மனைவியிடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்போருக்கு எதிர்பாரா இட மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இட குரு, சிறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவார்.வேலைபளு அதிகரிக்கும். புதிய பணிவாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் இருப்போர் சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சுப காரியங்கள் பல தடைகளுக்கு பின் நடக்கும். மாணவர்கள் கல்வியில் மிளிர்வார்கள். பெண்களால் தன வரவு ஏற்படும். பிரிந்த உறவுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படும்.

மீனம்:
எடுக்கும் முயற்சிகளிலில் பல தடைகளை கடந்த பின்னே வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாகனங்களிலில் செல்லும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு இந்தாண்டு திருமணம் நடக்கும். தொழில்களில் மிகுந்த லாபமேற்படும். பணியிடங்களில் பிறர் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்

பரிகாரம்:
குரு வக்கிர நிலையால் பாதிப்பை சந்திப்போர்கள்,வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து, மஞ்சள் நிற பூக்களையும்,கொண்டைக்கடலை மாலையையும் குரு பகவானுக்கு சாற்றி வணங்கி, தீய பாதிப்புகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம்.

தின ராசி பலன், வார பலன், கிரக பெயர்ச்சி பலன் உள்ளிட்ட பல தகவல்களை அறிய தெய்வீகம் முக நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -