- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இந்த மலர்கள் உங்கள் கையில் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இவற்றை கண்ணில் கண்டால் தவிர விடாதீர்கள்

இறைவனை வணங்குவதற்கு மங்களகரமான பொருட்கள் என்று அனேக பொருட்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை என்னவென்றால் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பன்னீர், ஜவ்வாது போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் இவை எதுவும் இல்லை என்றாலும் இறைவனுக்கு குறிப்பிட்ட மலர்களை மட்டும் வைத்து பூஜை செய்தாலே அவர் மனம் குளிர்ந்து நமக்கு வேண்டிய வரங்களை அளித்து விடுவார். அவ்வாறு உலகில் பூத்திருக்கும் பூக்கள் அனைத்தும் இறைவனை சேர வேண்டியவை. இறைவனின் பாதத்தை அலங்கரிப்பதற்காகவே பூக்கள் மண் மீது தோன்றுகின்றன. இவ்வாறு அற்புதங்கள் செய்யும் மலர்கள் எவை என்பதையும், அவற்றின் பலன்கள் என்ன என்பதையும் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த உலகில் ஆயிரம் அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு அற்புதமாக இந்த பூக்களையும் சொல்லலாம். இயற்கையாகவே இவற்றில் இருந்து வாசம் வருகிறது. இவற்றின் நிறங்கள் பலவித வண்ணங்களில் இருக்கின்றன. மலர்களை பார்த்துதான் பலவித வண்ண பொருட்கள் உருவாக்கப்பட்டன. நிறம் என்பது இவ்வாறுதான் இருக்கும் என்பதும் பூக்களை வைத்து தான் நாம் அறிந்திருக்கிறோம். வாசனை மிக்க திரவியங்களையும் மலர்களின் வாசனை கொண்டு தான் தயாரித்து வருகிறோம். இவ்வாறு மனிதனின் நவீன முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது இந்த மலர்கள் என்றும் சொல்லலாம்.

- Advertisement -

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த அற்புத மலர்கள் இறைவனின் பொற் பாதங்களில் சரணடையவே பூக்கின்றன. இந்த உலகில் தினமும் கோடிக்கணக்கான மலர்கள் புதியதாக மலர்கின்றன. பூக்கும் ஒவ்வொரு மலரின் ஆசையும் இறைவனை சேரவேண்டும் என்பதே. ஆனால் அவை அனைத்தும் இறைவனின் பாதங்களை அடைவதில்லை. ஒரு சில மலர்கள் மனிதர்களின் கைகளினால் இறைவனடி சேர்ந்து விடுகின்றன. ஒரு சில மலர்கள் திருமண நிகழ்ச்சி களுக்கும் அலங்காரம் செய்வதற்கும் தடை செய்வதற்கும் பயன் படுத்தப்படுகின்றன.

எப்படி மனிதன் நினைக்கும் ஆசைகள் அனைத்தும் முழுவதுமாக நிறைவேறுவதில்லையோ, அப்படித்தான் இந்த மலர்களின் ஆசைகளும் முழுவதுமாக அனைத்து மலர்களுக்கும் நிறைவேறுவது கிடையாது. இப்படி இந்த மலர்களை எவர் ஒருவர் தனது கைகளால் இறைவனிடம் சென்று சேர்த்துவிடுகிறாரொ, அவர்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று இந்த மலர்கள் ஆசீர்வாதம் செய்கின்றன. எனது பிறப்பு பயனான இறைவனடி சேர்ந்தமைக்கு உனக்கு நன்றி கூறுகிறேன் உனது வேண்டுதல் நிறைவேற நான் மனமார வாழ்த்துகிறேன் என்று மலர்கள் நம்மை வாழ்த்துகின்றன.

- Advertisement -

பொதுவாகவே நாம் மற்றவரிடம் ஆசீர்வாதம் வாங்கும் போது அவர்கள் நம்மை மனதார வாழ்த்தி விட்டார்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் வரும் தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு உங்களுக்கு நல்ல காலம் வந்து சேரும். இப்படி ஒருவர் உங்களை சுயநலமின்றி வாழ்த்துவதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்தும் நிச்சயம் கிடைத்து விடும். எனவே இந்த குறிப்பிட்ட மலர்களை படைத்து இறைவனுக்கு பூஜை செய்வதன் மூலம் நீங்கள் நினைத்ததை அடைய முடியும்.

அவ்வாறு மரிக்கொழுந்து, தாமரை, முல்லை பூ, மாம் பூ, சங்குப்பூ இந்த ஐந்து மலர்களை மட்டும் தவறாமல் பறித்துக் கொண்டோ அல்லது கடையில் வாங்கிக் கொண்டோ இறைவனுக்கு பூஜை செய்து பாருங்கள். உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலித்துவிடும்.

- Advertisement -