- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பணத்தை ஈர்க்கும் மையை வீட்டிலேயே இப்படி தயாரித்து பயன்படுத்திப் பாருங்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.

பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கும் ஆனால் பொதுவாக அதிக பிரச்சினைக்கு காரணம் பணமாக தான் இருக்கும். சிலருக்கு பணவரவு அதிகம் இருக்காது. சிலர் கடன் தொல்லையில் சிக்கி அதிகம் கஷ்டத்தில் இருப்பார்கள். இன்னும் சிலருக்கு பண வரவு இருக்கும் ஆனால் வரும் பணம் கையிலேயே தங்காது. வீண் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இப்படி பல விதமான பண பிரச்சனைகள் இருந்துந்தாலும் பணத்தை தன்னிடம் ஈர்த்து ஒருவரின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறீர்கள்.

இந்த பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனைப் பெரும்பாலும் பெயர் சொல்லாதது என்று சொல்வர். இந்தப் பொருளின் பெயர் வசம்பு. இந்த வசம்பிடம் எந்த ஒரு தீய சக்தியும் நெருங்காமல் இருப்பதால் இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகம் உள்ளது. நமது முன்னோர்கள் இதை எப்போதும் வீட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் உள்ளவர்கள் அவற்றை பின்பற்றுவதில்லை.

- Advertisement -

வசம்பை பயன்படுத்தும் முறையான வழிமுறைகள்:
வசம்பு வீட்டில் இருந்தாலே எந்த தீய சக்திகளும் வீட்டிற்குள் நுழைவது இல்லை. இந்த வசம்பின் ஒரு சிறு துண்டை எப்பொழுதும் பணம் வைக்கும் பர்ஸில் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் பர்ஸில் உள்ள பணத்திற்கு எந்தவித பாதிப்பும் வருவதில்லை. அதிலுள்ள பணம் செலவாகி விட்டாலும் மீண்டும் வருமானத்தை பெற்றுத்தரும் ஆற்றல் இந்த வசம்பிற்கு உண்டு. இதனால் ஏதாவது ஒரு வழியில் பர்ஸில் பணம் திரும்ப திரும்ப வந்து சேரும்.

வசம்பினை கடைக்குச் சென்று வாங்கும் பொழுது அவர்கள் எவ்வளவு விலை கூறினாலும் வாங்கிக் கொள்ளுங்கள். வசம்பை வாங்கும்பொழுது பேரம் பேசக்கூடாது. வாங்கிய வசம்பினை பூஜை அறையில் மட்டும் தான் வைக்க வேண்டும். சமையல் அறையிலோ அல்லது படுக்கை அறையிலோ வைக்கக்கூடாது.

- Advertisement -

வசம்பு மை தயாரிப்பது எப்படி:
காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அகல் விளக்கு இல்லை என்றால் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றலாம். கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கினை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு வசம்பை எடுத்து அதன் ஒரு நுனி பகுதியை தீபச்சுடரில் காட்ட வேண்டும். சிறிது நேரத்தில் அதன் நுனிப்பகுதி நன்றாக கருக ஆரம்பிக்கும். கறுப்பாக மாறியவுடன் நமது மோதிர விரலில் சிறிது நெய்யை தடவி, கருப்பாக மாறிய வசம்பின் நுனிப்பகுதியை தடவி எடுக்க கருமையான மை கிடைக்கும். இதனை நமது உச்சந்தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் வெளியில் செல்லும் முன்னர் இதனை நெற்றியிலும் அல்லது உச்சந்தலையிலோ தடவிக் கொண்டு செல்லலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்யும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் எப்போதும் வெற்றி கிடைக்கும். புதியதாக ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அல்லது ஒரு கடனை வசூல் செய்ய செல்வதாக இருந்தாலும், இவ்வாறு வசம்பு மையினை தடவிக் கொண்டு சென்றால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதனை தினமும் தொடர்ந்து செய்து வரும்போது உங்களிடம் பணம் வருவதை நீங்களே உணர முடியும்.

- Advertisement -
Published by