- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அட்சய திருதி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

அட்சய திருதி என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது தங்கம் தான். அந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்றொரு ஐதீகம் உண்டு ஆகையால் மிகவும் எளிமையான நிலையில் உள்ளவர்கள் கூட அன்றைய நாளில் சிறிய அளவிலேனும் தங்கத்தை வாங்க முயற்சி செய்வார்கள் அப்படி கூட வாங்க முடியாதவர்கள். வேறு சில பொருட்களை வாங்கினால் தங்கம் வாங்கிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திருதி நாளில் வாங்க வேண்டியது என்ன?

அமாவாசைக்கு அடுத்து வளர்பிறை திதியில் அக்ஷய திரி வரும் அக்ஷயம் என்றாலே அது பெருகுதல் என்ற அர்த்தம். ஆகையால் தான் அந்த நாளில் தங்கத்தை வாங்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் தங்க மட்டுமல்ல அந்த நாளில் எதை வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த அக்ஷய திதியானது 10.5.2024 வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் உள்ளது இருந்தாலும் தங்கம் வாங்குவதற்கு என சில குறிப்பிட்ட முகூர்த்த நேரங்கள் உள்ளது. முதலில் அதை தெரிந்து கொள்ளலாம். காலை 8 .56 முதல் 10.37 வரை. மதியம் 12.18 முதல்1.59 வரை. மாலை 5.21 முதல் 7.20 வரையிலான இந்த நேரங்களை தங்கம் வாங்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம்முடைய செல்வ வளத்தை பெருக்கக் கூடிய சில பொருட்களையும் சொல்லி இருக்கிறார்கள். அதை அன்றைய தினத்தில் வாங்கலாம் அது என்னென்ன பொருட்கள் என்பதை இப்போது பார்க்கலாம். அட்சய திருதி அன்று தங்கம் வெள்ளி மட்டுமின்றி நிலம் வீடு சம்பந்தமான பொருட்களையும் வாங்கலாம். இதுவும் நம்முடைய செல்வ வளத்தை பெருக்கக் கூடியது தான். ஆனால் இதை எல்லோராலும் வாங்க முடியாது அல்லவா.

- Advertisement -

ஆகையால் அன்றைய தினத்தில் உப்பு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்களை வாங்கலாம். இது வீட்டிற்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பெற்றுக் கொடுக்கும். அதுவும் இந்த அட்சய திருதியானது வெள்ளிக்கிழமையில் வந்திருப்பது மிகவும் விஷேசமானது. இது போன்ற பொருட்களை இந்த நாளில் வாங்கினால் யோகம் உண்டாக்கும்.

அடுத்து பச்சை நிறத்திலான பொருட்களை வாங்கலாம். இது மட்டுமின்றி தானியங்களை வாங்கலாம். வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குபவர்கள் அன்று வாங்கலாம் காரம் சார்ந்த பொருட்களையும், எண்ணெய் வகைகளையும் மற்றும் அன்றைய தினத்தில் வாங்க வேண்டாம். இவை அனைத்திலும் விட அட்சய திருதியில் அட்சயத்தை அள்ளித் தரக் கூடிய பொருளாக ஒன்று சொல்லப்படுகிறது அது தான் மன்னாளான பொருட்கள்.

இதையும் படிக்கலாமே: திடீர் பணத் தேவை பூர்த்தி செய்ய பரிகாரம்

அன்றைய நாளில் ஏதேனும் மண் பண்டங்கள் வாங்குவது நம்முடைய செல்வ நலனை பல மடங்கு பெருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதோடு மட்டுமின்றி அன்றைய நாளில் தானங்கள் செய்வதும் நம்முடைய செல்வ வளத்தை பெருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பதிவில் உள்ள தகவல்களில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறுங்கள்.

- Advertisement -