- Advertisement -

10-05-2024 அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க நல்ல நேரம்

சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு, மூன்றாவது நாள் திரிதியை திதி வரும். இந்த நாளை தான் அட்சய திருதியை நாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த மூன்று என்ற எண்ணைக் குறிக்க கூடியவர் குருபகவான். குருவைத்தான் பொன்னன் என்றும் அழைப்பார்கள். அதாவது தங்கத்துக்கு அதிபதி அவர். இதனால் தான் இந்த இந்த அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் அந்த தங்கம் பெருகும் என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

அட்சயம் என்ற வார்த்தை ‘அல்ல அல்ல குறையாது’ என்பதைக் குறிக்கின்றது. இந்த வருடத்தின் அட்சய திரிதியானது 10-05-2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் தொடங்கி, எந்த நேரத்தில் முடிகின்றது, இந்த வருட அட்சய திரிதியில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் தங்கம் சேரும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

தங்கமாக நல்ல நேரம்

மே 10ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 4:00 மணி முதல் 11-ம் தேதி சனிக்கிழமை மதியம் 2:30 மணி வரை அட்சய திருதியை இருக்கின்றது. ஆகவே இந்த இரண்டு நாட்களில், எந்த நாளில் வேண்டும் என்றாலும் நீங்கள் தங்கம் வாங்கலாம். தவறு கிடையாது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு சொந்தமான நாள் என்பதால் கூடுமானவரை வெள்ளிக்கிழமை அன்று தங்கத்தை வாங்குவது அதீத சிறப்பானது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியிலிருந்து மதியம் 12:20 மணி வரை தங்கம் வாங்கலாம். வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியிலிருந்து 8:00 மணிக்குள் தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம். இதே போல தான் சனிக்கிழமை காலை 5:30 மணியிலிருந்து மதியம் 12:20 க்குள் தங்கம் வாங்குவதற்கு நல்ல நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அட்சய திரிதியை அன்று தங்கம் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாய்ப்பு இருப்பவர்கள், கையில் பணம் வைத்து இருப்பவர்கள், தங்கம் தேவை என்பவர்கள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்கி தங்கம் வாங்காதீங்க. கணவரோடு சண்டை போட்டு தங்கம் வாங்காதீங்க.

சந்தோஷமாக கணவன் மனைவி இரண்டு பேரும் சென்று கூடுமானவரை ஒரு மில்லிகிராம் அளவு தங்கம் வாங்கினாலும் அது சுபிட்சத்தை தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி கூட வாங்கலாம். பேராசை வேண்டாம், அது கடைசியில் பெரும் நஷ்டத்தில் கொண்டு போய் நிறுத்தி விடும்.

- Advertisement -

தங்கம் வாங்க முடியாதவர்கள் கூட நாளைய தினம் தங்கத்துக்கு இணையான மகாலட்சுமிக்கு சொந்தமான கல்லுப்பு, மஞ்சள் தூள், குங்குமம், விரலி மஞ்சள், போன்ற பொருட்களை உங்களுடைய வீட்டிற்க்காக வாங்கலாம். அல்லது உங்கள் வீட்டிற்கு ஏதாவது ஒரு பொருள் புதுசாக வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி இது போன்ற ஏதாவது உபயோகமான பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் நாளைய தினம் வாங்கலாம்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற விநாயகர் வழிபாடு

புதுசாக துணிமணிகள் எடுக்கலாம். மல்லிகை பூ வாங்கலாம். உங்களுக்கு மனதுக்கு சந்தோஷத்தை தரும் எந்த பொருட்களை வாங்கினாலும் அது நல்லது தாங்க. இப்படி சின்ன சின்ன எளிமையான பொருட்களை வாங்குவதன் மூலமாகவும் உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிச்சயம் பெருகும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -