- Advertisement -

வாழ்க்கையில் எதிர்பாராமல் வரும் கஷ்டங்கள் சில சமயத்தில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு பண்ணி விடும். சுமூகமாக செல்லும் வாழ்க்கை திடீரென்று புயல் அடித்தது போல, சின்னாபின்னமாக மாறி இருக்கும். என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடியாது. திடீரென்று வேலை போய் இருக்கும். திடீரென்று கடன் வாங்கி இருப்பீங்க.

திடீரென்று வீட்டில் இருப்பவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். எங்கிருந்தோ ஒருவன் வந்து உங்கள் குடும்பத்தையே ஏமாற்றி இருப்பான். உங்கள் வீட்டில் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக சில வேலைகளை செய்து விடுவார்கள். எதனால் இவ்வளவு பிரச்சனை வந்தது என்று தெரியாமல் உங்களுடைய குடும்பமே சூனியம் அடைந்து காணப்படும்.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு காளி வழிபாடு. காளி என்றதுமே பயந்து விடாதீர்கள். காளி உக்கிர தெய்வமாயிற்றே என்று. தீராத கஷ்டத்திற்கு உடனடியாக தீர்வு தரக்கூடிய சக்தி இந்த காளிக்கு இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை காளி வழிபாடு

செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் (மாலை 4:30-6:00) காளி கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். காளி கோயிலில் திரிசூலம் கட்டாயமாக இருக்கும். மூன்று எலுமிச்சம் பழத்தை வாங்கி உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் சொல்லுங்கள்.

- Advertisement -

அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து இந்த எலுமிச்சம் பழத்தை அந்த திரிசூலத்தில் குத்தி விட்டு காளியை மனம் உருகி பிரார்த்தனை செய்து, சிறிது நேரம் அந்த கோவிலில் அமர்ந்து வழிபாடு செய்து விட்டு, பிறகு வீடு திரும்பவும். குறிப்பாக எதிர்மறை ஆற்றலின் மூலம் தாக்கப்பட்டவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் உங்களுக்கான அந்த பிரச்சனை உடனே விலகும்.

ஏவல் பில்லி சூனியம் கண் திருஷ்டி, எதிரிகளால் தொல்லை, தொழிலில் துரோகம், வாழ்க்கையில் துரோகம் ஏமாற்றப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், எல்லாம் இந்த வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். உண்மையான பக்தியோடு உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் காலியிடம் வைத்த வேண்டுதல் உடனே பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: மின்னல் வேகத்தில் பணம் தரும் பரிகாரம்

ஆண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பெண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். காளியின் ஸ்ரூபம் தான் துர்க்கை அம்மன். உங்கள் வீட்டின் அருகில் காளி கோவிலே இல்லை எனும் பட்சத்தில் மட்டும் பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் இந்த வழிபாட்டை செய்யுங்கள். ஆனால் காளி கோவிலில் சென்று வழிபாடு செய்வது உடனடியாக முழு பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -