- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நாளை சித்திரை அமாவாசை – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருட கணக்கில் முதலாவதாக வரும் மாதம் சித்திரை மாதமாகும். இந்த மாதத்தில் வரும் தினங்கள், திதிகள் அனைத்தும் சிறப்பானதாகும். புதுமனை புகுவிழா, திருமணம் போன்றவை இந்த சித்திரை மாதத்தில் அதிகம் செய்யப்படுகின்றன. இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் “சித்திரை மாத அமாவாசை” தினத்தின் சிறப்புகளையும், இந்த அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

சித்திரை மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.

- Advertisement -

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் தொடக்க மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் புத்தாண்டு உங்களுக்கு யோகமான காலமாக அமையும்.

சித்திரை மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் ஆகும். இந்த சித்திரை மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த தடை, தாமதங்கள் நீங்கும். திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடக்கும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு, அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை விரைவில் கிடைக்கும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி, பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் நீங்கப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இந்த 8 தானத்தை செய்தால் வம்சத்திற்கே பலன் உண்டு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chithirai amavasai in Tamil. It is also called as Amavasai valipadu in Tamil or Chithirai matham in Tamil or Amavasai sirappu in Tamil or Chithirai matha sirappugal in Tamil.

- Advertisement -