- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இன்று மாலை இவற்றை செய்தால் அற்புதமான பலன்களை பெறலாம்

பங்குனி மாதத்தை போலவே பல கோயில்களில் இறைவனுக்கு விழாக்களும், வைபவங்களும் செய்யப்படுகின்ற ஒரு மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதிக்கு பிறகு வரும் தேய்பிறை காலத்தில் வரும் ஒரு அற்புத தினம் சித்திரை தேய்பிறை பிரதோஷம். இந்தப் சித்திரை தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் பலன்களை அதிகம் தரும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த சித்திரை தேய்பிறை பிரதோஷம் இருக்கிறது. அதிலும் இன்றைய தேய்பிறை பிரதோஷம் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை வருவது கூடுதல் சிறப்பு தினத்தில் நந்தி தேவர் மற்றும் சிவபெருமானை முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவார்கள்.

- Advertisement -

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். சித்திரை தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி, சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் குரு பகவானுக்கு பூக்கள் சாற்றி, கொண்டைக்கடலையை நைவேத்தியம் செய்து குரு பகவானுக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்க வேண்டும்.

- Advertisement -

இறைவழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ப பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சுண்டல், கேசரி போன்ற பிரசாதங்களை வழங்குவது சிவபெருமான் மற்றும் குரு ஆகியோரின் அருட்கடாட்சத்தை உங்களுக்கு கொடுக்கும். சித்திரை தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு செய்த பாவங்களுக்கான கர்ம வினைகள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கல்வி, தொழில் போன்றவற்றில் மேன்மையான நிலை ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
புத்திர தோஷம் நீங்கி குழந்தை பேறு உண்டாக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chithirai Theipirai pradosham in Tamil. It is also called as Chithirai matham in Tamil or Pradosham valipadu in Tamil or Chithirai pradhosham in Tamil or Chithirai matha pradhoshangal in Tamil.

- Advertisement -