- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முடி உதிர்வதை தடுக்கும் கருவேப்பிலை

ஒரு குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரை நம் உடலில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு என்றால் அது முடி தான். எந்த வயதிலும் முடி வளர்ச்சி என்பது இருக்கத்தான் செய்யும். மற்ற உறுப்புகள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வயது மட்டுமே வளர்ச்சி இருக்கும். ஆனால் முடிக்கு மட்டும் தான் தன்னுடைய ஆயுள் காலம் முடியும் வரை வளர்ச்சி என்பது இருக்கும். அதனால் யாரும் முடி வளர்ச்சி இல்லை என்றோ, முடி உதிர்ந்த இடத்தில் வளரவில்லை என்றோ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. எப்பேர்பட்ட முடி உதிர்ந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் முடி வளர்வதற்கு கருவேப்பிலையை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு முடியின் ஆயுட்காலம் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை தான் இருக்கும். சிறிய முடியாக முளைத்து அதனுடைய ஆயுட்காலம் வரும் வரை அது அப்படியே இருந்து பிறகு உதிர்ந்து விடும். கிட்டத்தட்ட இலையுதிர் காலம் போல சில குறிப்பிட்ட காலங்களில் முடி உதிர்தல் என்பது அதிகமாக ஏற்படும். இப்படி இருந்தால் இதனால் எந்த வித பிரச்சினையும் கிடையாது. ஆனால் முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி வளரவில்லை என்றாலோ அல்லது சிறிய முடியாக இருக்கும்பொழுதே உதிர்ந்து விடுகிறது என்றாலோ தான் நமக்கு உடல் ரீதியாக ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

- Advertisement -

உடல் ரீதியாக பாதிப்பு என்ற உடன் பயந்து விட வேண்டாம். சத்து குறைபாடினாலும், மன அழுத்தம் காரணமாகவும், தூக்கமின்மை காரணமாகவும், முறையாக ஆரோக்கியமான உணவுகளோ, தண்ணீரோ அருந்தாமல் இருப்பதாலும் இந்த முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஏற்படும். அதை சரி செய்து கொண்டு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முடி வளர்ச்சியை நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். அந்த பொருட்களில் ஒன்றுதான் கருவேப்பிலை.

கருவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் அரைத்து மோரின் கலந்து குடிப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய இரும்புச்சத்தின் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினை என்பது நின்றுவிடும் என்றும் இளநரை ஏற்படுவது தடுக்கப்படும் என்றும் மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. இதே கருவேப்பிலையை நம்முடைய தலைக்கு வெளிப்புறமாகவும் நாம் உபயோகப்படுத்தினோம் என்றாலும் தலைமுடி வளர்ச்சி ஏற்படும். அதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஒரு கைப்பிடி கருவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணெயை ஊற்ற வேண்டும். ஆமணக்கு எண்ணெய் இல்லாத பட்சத்தில் தேங்காய் எண்ணெயை கூட உபயோகப்படுத்தலாம். ஆமணக்கு எண்ணெயில் இருக்கக்கூடிய சத்துக்கள் நம்முடைய முடி வளர்ச்சியை தூண்டும். உடல் சூட்டை குறைக்கும். முடியை கருமையாக்க உதவும். ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நீரை நம்முடைய தலைக்கு சீரம் தடவுவது போல் தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு ஸ்பிரே பாட்டிலை பயன்படுத்தியோ அல்லது காட்டன் பால்ஸை பயன்படுத்தியோ தடவ வேண்டும். பிறகு அதை அப்படியே விட்டுவிடுங்கள். தலைக்கு குளிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. மறுநாள் தலைக்கு குளித்தாலும் பரவாயில்லை. குளிக்காவிட்டாலும் பரவாயில்லை. முடியை நன்றாக உலர வைத்துவிட்டு எப்பொழுதும் போல் தலையை சீவிக் கொள்ளலாம்.

இப்படி தொடர்ந்து ஒரு வாரங்கள் இந்த கருவேப்பிலை சீரத்தை நம்முடைய தலையில் தடவுவதன் மூலம் முடி உதிர்தல் என்பது கணிசமாக குறையும். அதோடு மட்டுமல்லாமல் புதிய முடிகள் வளர்வதை கண்கூடாக பார்க்க முடியும். இந்த சீரத்துடன் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணையையும் சேர்த்துக் கொண்டால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்ட் ஹேர் டை
மிகவும் எளிதில் ஓசியாக கிடைக்கக்கூடிய கருவேப்பிலையை நாம் இந்த முறையில் பயன்படுத்தி நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்வோம்.

- Advertisement -