- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முடி நன்றாக வளர ஷாம்பு தயார் செய்யும் முறை

வேகவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகத்தில், நம்மை கவனிப்பதற்கே நேரம் இல்லை. இதில் நம்முடைய தலைமுடியை கவனிப்பதற்கு ஏது நேரம். நீங்க வேலைக்கு செல்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, அல்லது வீட்டிலேயே இருப்பவர்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய தலை முடிக்கு கொஞ்சமாவது அக்கறை காட்டுங்கள்.

முடி எல்லாம் கொட்டிய பிறகு, முடி கொட்டி விட்டதே என்று கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் கிடையாது. இருக்கின்ற நாலு முடியையாவது பத்திரமா பாத்துக்கணும். அதற்காக சுலபமான ஒரு அழகு குறிப்பு இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

தலைமுடி வளர்ச்சிக்கு ஷாம்பு தயார் செய்யும் முறை

இந்த ஷாம்பூ தயார் செய்ய என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை முதலில் பார்த்து விடுவோம். முதலில் அரிசி ஊற வைத்த தண்ணீர் தேவை. அரிசியில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசி கீழே ஊற்றி விடுங்கள். பிறகு குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி அந்த அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அந்த ஊற வைத்த தண்ணீரை மட்டும் 250ml வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இந்த தண்ணீரை ஊற்றி விடுங்கள். இதோடு 6 கொத்து கருவேப்பிலையை காம்புகளோடு நறுக்கி போடுங்க, வெந்தயம் 1 ஸ்பூன், டீ தூள் 1 டேபிள்ஸ்பூன், 3 சின்ன வெங்காயம் தோலை உரித்து விட்டு பொடி பொடியாக நறுக்கி இதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கலவையை அப்படியே ஸ்டவ்வில் வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து, உடனே அடுப்பை அணைத்து விடுங்கள். தண்ணீர் சுண்டி வரவேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. தண்ணீர் கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இந்த பொருட்கள் எல்லாம் சேர்ந்த கலவையை ஒரு மூடி போட்டு அப்படியே விட்டு விடுங்கள்.

இரவில் இதை தயார் செய்துவிட்டு மறுநாள் காலை வரை அப்படியே ஊறவிட்டாலும் சரிதான். மறுநாள் காலை இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரோடு நீங்கள் தலைக்கு பயன்படுத்த கூடிய ஷாம்பு 2 ஸ்பூன், சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்தால், ஒரு மாசம் வரை இந்த ஷாம்புவை பயன்படுத்தலாம். எந்த பிராண்ட் ஷாம்பு வேண்டும் என்றாலும் இந்த தண்ணீரில் கலக்கலாம் பிரச்சனை கிடையாது.

- Advertisement -

வாரத்தில் 2 நாள் என்ற கணக்கில் இந்த ஷாம்பை தலைக்கு தேய்த்து குளித்தாலே உங்களுடைய தலை முடி உதிர்வு குறைய தொடங்கும். முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதுப்புது முடிகள் வளரத் தொடங்கும். இந்த ஷாம்புவை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. ஹாஸ்டலில் இருப்பவர்களும் இதுபோல வீட்டிலிருந்தே தயார் செய்து எடுத்துச் செல்லலாம்.

இதையும் படிக்கலாமே: பளபளப்பான முகத்தைப் பெற ஃபேஸ் பேக்

அதிலும் குறிப்பாக இந்த வெயில் காலத்தில் உடம்பு சூட்டினால் முடி அதிகமாக சில பேருக்கு கொட்டும். இந்த லிக்விடில் வெந்தயம், அரிசி கலைந்த தண்ணீர் எல்லாம் சேர்த்து இருப்பதால், உங்களுடைய உடல் சூட்டை குறைத்து தலைமுடி உதிர்வதையும் குறைய செய்யும். இதில் டீத்தூள் சேர்த்திருக்கின்றோம் கருவேப்பிலை சேர்த்திருக்கின்றோம். ஆகவே இந்த ஷாம்பு நரைமுடி வருவதையும் தள்ளிப் போட உங்களுக்கு உதவி செய்யும். இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -