பளபளப்பான முகத்தைப் பெற ஃபேஸ் பேக்

shining face
- Advertisement -

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் அன்றாடம் தங்களுடைய முகத்தை பராமரிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு செயலாக திகழ்கிறது. அப்படிப்பட்டவர்கள் விசேஷத்திற்காக பொது நிகழ்ச்சிகளுக்கு எங்காவது செல்ல வேண்டும் என்றால் அந்த சமயத்தில் தங்களுடைய அழகை மேலும் மெருகு படுத்துவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சமையலறை என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் இளமையையும் அழகையும் தக்கவைத்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு இடமாகவே திகழ்கிறது. இந்த இடத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான உணவுப் பொருட்களும் நமக்கு பொக்கிஷமாகவே திகழக்கூடிய பொருட்களாகும். இருப்பினும் அதை நாம் உணராமல் உதாசினம் படுத்தி தேவையற்ற பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தையும் அழகையும் கெடுத்துக் கொள்கிறோம். சரி இப்பொழுது வாடிய முகத்தை புதிதாக பூத்த மலர் போல அழகாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

- Advertisement -

நம்முடைய முகத்தில் சுற்றுச்சூழல் காரணமாகவோ அல்லது ஹார்மோன் பிரச்சினைகளாலோ அல்லது ஒழுங்காக முகத்தை பராமரிக்காத காரணத்தினாலோ நம்முடைய முகம் பொலிவிழந்து மிகவும் வாடிய நிலையில் இருக்கும். அப்படி பொலிவிழந்த சருவத்தை மீண்டும் பொலிவாக மாற்றுவதற்கும் புத்துணர்ச்சியுடன் திகழ்வதற்கும் முதல் நாள் இரவே மூன்று ஸ்பூன் அளவிற்கு கட்டித் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை கலந்து நன்றாக கிரீமாக வரும் அளவிற்கு கலந்து கொள்ள வேண்டும். முகத்தை சுத்தம் செய்த பிறகு இந்த கிரீமை நம்முடைய முகத்தில் தடவி நன்றாக உலர விட வேண்டும். இப்படி கிரீம் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விட்டு அப்படியே படுத்து விட வேண்டும். சோப்பு போடக் கூடாது.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு நாட்டுத்தக்காளியை எடுத்து அதன் சாறை தனியாக பிழிந்து அந்த சாரை நம்முடைய முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொலி விழந்த முகமும் புதுப்பொலிவைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சருமநிறமும் அதிகரித்து பளபளப்பான தோற்றத்தை நம்மால் பெற முடியும்.

தயிர், தேன், தக்காளி இவை மூன்றுமே அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய பொருட்கள் தான். இதற்காக நாம் மெனக்கெட்டு வேறு எந்த பொருட்களையும் வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. இந்த பொருட்களை நாம் முறையாக நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் என்றும் இளமையாக புதுப்பொலிவுடன் அழகான தோற்றத்தை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: நரை பிரச்சினையை சரி செய்யும் ஹேர் பேக்

இந்த எளிமையான குறிப்பை பயன்படுத்தி இழந்த பொலிவை மீண்டும் பெற்று அழகாகவும் இளமையாகவும் திகழ்வோம்.

- Advertisement -