- Advertisement -

தீய சக்திகளால் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்கள் எந்த ஒரு காரியத்தையும் எளிதில் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள். மேலும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. இதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் சண்டை சச்சரவுகள், நோய் நொடிகள், வறுமை என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் அமாவாசை தினத்தன்று எந்த முறையில் பரிகாரம் செய்தால் தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக விலகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றலோ தீய சக்திகளோ இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் எந்த வித மங்களகரமான காரியங்களும் நடக்காது என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒருவித துர்நாற்றம் வீசுவதோ அல்லது அபசகுனமான செயல்கள் அடிக்கடி வீட்டில் நடப்பது போன்றவை தீய சக்திகள் இருப்பதற்குரிய அறிகுறிகளாக திகழ்கிறது. இப்படி எதையாவது நாம் உணர்ந்தோம் என்றால் இந்த தாந்திரீக பரிகாரத்தை நாம் மேற்கொண்டாலே நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலக ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் அமாவாசை தினத்தன்று தான் செய்ய வேண்டும். அமாவாசை தினம் வரும் நாள் அன்று உங்கள் வீட்டிற்கு அருகில் கடல் இருக்கும் பட்சத்தில் கடலுக்கு ஐந்து லிட்டர் கேனை எடுத்துக்கொண்டு சென்று கடல் தண்ணீரை அதில் நிரப்பி வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். அருகில் கடல் இல்லை என்று நினைப்பவர்கள் கடைக்கு சென்று கல் உப்பை வாங்க வேண்டும்.

இவ்வாறு நாம் கல்லுப்பை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட்டில் இருக்கும் கல்லுப்பை வாங்காமல் மூட்டைகளில் மொத்தமாக இருக்கும் கல்லுப்பிலிருந்து ஒரு கிலோ 2 கிலோ என்று வாங்கி வர வேண்டும்.

- Advertisement -

அமாவாசை தினத்தன்று வரக்கூடிய சனி ஹோரையில்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். கடல் தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் சனி ஹோரையில் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து இடங்களிலும் கடல் தண்ணீரை தெளிக்க வேண்டும். கடல் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் நம் வீட்டில் இருக்கக்கூடிய போர் தண்ணீர் அல்லது கிணற்று தண்ணீரை எடுத்து அதில் கல் உப்பை கலந்து வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளித்து முடித்த பிறகு அதே சனி ஹோரையில் வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். இந்த தூபத்தை தினமும் சனிஹோரை எப்பொழுதெல்லாம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் வீட்டில் தூபம் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் வெளியேறும். இந்த தூபத்தை நாம் வீட்டில் இருக்கக்கூடிய பாத்ரூம் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீட்டில் தங்க வழிபாடு

நாம் முன்னேறக்கூடாது என்று நினைத்து செய்யக்கூடிய தீய செயல்கள் அனைத்தும் நம்மையும் நம் வீட்டையும் விட்டு படிப்படியாக விலகி நமக்கு நல்ல ஒரு முன்னேற்றத்தை தரும்.

- Advertisement -