- Advertisement -

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பெரும் பாடுபடுவது இந்த கடன் தொல்லையால் தான் வாழும் வாழ்க்கை முழுவதுமே கடனுக்காக வடிக்கட்டுவதும் அந்த வட்டிக்காக இன்னொரு இடத்தில் கடன் வாங்குவது என்றே கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்றால் இன்று முக்கால்வாசி பேர் இது போன்ற துன்பத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்ன தான் இந்த கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தாலும் அதை அடைப்பதற்கான வாய்ப்பே சிலருக்கு வராது. நாம் வாங்கும் போது ஏதோ ஒரு வகையில் அடைத்து விடலாம் அல்லது நமக்கு வரவேண்டிய பணம் இருக்கும் இதையெல்லாம் கொண்டு அடைத்து விடலாம் என்று தான் வாங்குவோம்.

- Advertisement -

ஆனால் கடனை வாங்கிய பிறகு அது அடையாமல் வளர்ந்து கொண்டே போகும். இப்படியான பிரச்சனை தீர அற்புதமான ஒரு மந்திரம் உள்ளது என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் அடைய ஒரு வரி மந்திரம்

நம்முடைய வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடிய கடன் தொல்லையை ஒரு வரி மந்திரத்தால் சரி செய்து விடலாம் என்ற இந்த வார்த்தையை கேட்கும் போதே எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது பொய்யில்லை உண்மை தான் என்று சொல்லப்படுகிறது. அது கடன் அடைய நாம் காத்தவராயன் மந்திரத்தை தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

காத்த விராயன் என்பது ஒரு காவல் தெய்வம் இவர் ஆலமரத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம் உண்டு. யாருக்கு எந்த துன்பம் என்று இவரை நினைத்து அழைத்தாலும் உடனே வந்து அவர் களுக்கு அருள் பாலிப்பார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி பணவரவிற்கு வழிபட வேண்டிய உகந்த தெய்வம் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரமும் இவருடைய மந்திரம் தான்

ஓம் சுமந்தோ சுமந்தோ ஸ்ரீ கார்த்த வீர்ய அர்ஜுனாய நமஹ

இந்த மந்திரத்தை தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சொல்ல வேண்டும். எத்தனை முறை சொல்ல வேண்டும் என்பது தான் முக்கியமானது. தினமும் குறைந்தது ஆயிரம் முறை சொல்ல வேண்டும். உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ அத்தனை அதிகமாக இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ஆயிரம் முறை சொல்வதா! என்று யோசிக்க வேண்டாம்.

- Advertisement -

முதலில் சில நாட்கள் மட்டும் தான் சிரமமாக இருக்கும். அதன் பிறகு நேரங்கள் குறைவாகவே எடுக்கும். கடன் தொல்லையால் தினம் தினம் அவதிப்பட்டு தேவையில்லாத ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் வாங்கி துன்பப்படுவதை காட்டிலும் இந்த மந்திரத்தை ஜெபிப்பது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் வழிபட்டால் எத்தனை பெரிய கடனும் அடைவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தொட்ட காரியம் துலங்க மஞ்சள் கிழங்கு பரிகாரம்

அதுமட்டுமின்றி நாம் வெளியில் பணம் கொடுத்து வராமல் இருந்தால் அந்த பணமும் நம்மை தேடி வரும் என்றும் சொல்லப்படுகிறது. பணம் அல்லாமல் சிலர் நகையாக கொடுத்திருப்பார்கள் எத்தனை கேட்டும் அவர்கள் தராமல் இழுத்து அடிப்பார்கள் அது போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த மந்திரத்தை சொன்னால் தீர்வு உண்டு என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -