- Advertisement -

தீய சக்திகள் வராமல் தடுக்க பரிகாரம்

ஒரு வீட்டில் நிலை வாசலானது அந்த வீட்டிற்கு பெரிய அரண் போல் பாதுகாக்க கூடியது. அதனால் தான் நிலை வாசலை ராஜவாசல் என்று நம் முன்னோர்கள் காலம் முதல் சொல்லி வந்திருக்கிறார்கள். நம்முடைய அனைத்து வழிபாட்டுக்களிலும் முதன்மையானதாக நிலை வாசல் வழிபாட்டை செய்தும் வந்திருக்கிறார்கள். இன்றளவும் பலரும் அதை கடைபிடித்து வருகிறார்கள்.

நம் வீட்டிற்கு எந்த தீங்கும் வராமல் காக்கக் கூடிய தன்மையும் இந்த நிலை வாசலுக்கு உண்டு. வீட்டில் நிலை வாசலை நாம் முறையாக பராமரித்தாலே ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சனைகளை தடுத்து விடலாம் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தீமைகள் நெருங்காமல் இருக்க நிலை வாசல்

இன்று பெரும்பாலானோர் நிலை வாசலில் பல்வேறு விதமான தெய்வப் படங்கள் கண் திருஷ்டி படங்கள் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த வீட்டிற்கு அத்தனை நன்மையும் கிடைத்து விடும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.

ஏனெனில் நிலை வாசலில் வைக்கக் கூடிய படங்களாக இருக்கட்டும் வாஸ்து சார்ந்த படங்களாக இருந்தாலும் அவரவர்க்கு ஏற்றபடி அதில் மாறுதல்கள் இருக்கும். ஒருவருக்கு வேலை செய்யும் இந்த படங்கள் மற்றவருக்கு அதே முறையில் வேலை செய்யாது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் நிலை வாசலில் நாம் என்ன தான் வைக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

நிலை வாசலில் திரிசூலம் வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த திரிசூலத்தை நீங்கள் கடையிலிருந்து வாங்கி வந்து அப்படியே வைக்கக் கூடாது. அதே போல் பெரிய அளவிலான திரிசூலத்தையும் வைக்கக் கூடாது. ஒரு அங்குலம் முதல் இரண்டு அங்குலம் வரை உள்ள சிறிய திரிசூலத்தை தெய்வீக பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள்.

இதை வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தமான பன்னீர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று இந்த சூலத்தை அம்மன் மடியில் வைத்து உருவேற்றி வாங்கி வர வேண்டும். இதை கோவிலில் உள்ள பூசாரிகளிடம் சொன்னால் செய்து தருவார்கள். அதன் பிறகு இந்த திரிசூலத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டின் நிலை வாசலில் மேலே வைத்து அடித்து விடுங்கள்.

- Advertisement -

இதை நிலை வாசலில் அடிக்கக் கூடாது நிலைவாசல் மேலே உள்ள சுவற்றில் அடிக்க வேண்டும் எனில் நிலை வாசலில் ஆணியை பயன்படுத்தக் கூடாது. இந்த ஒரு திரிசூலம் வாசலில் இருக்கும் போது தெய்வ சக்தியை தவிர வேறு எந்த சக்தியும் உள்ளே நுழையாது என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி வீட்டில் எப்பொழுதும் நல்ல அதிர்வலைகளை உருவாக்கி தெய்வங்கள் ஆனந்தமாய் குடிகொள்ள வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட மந்திரம்

எந்த தெய்வங்களும் உள்ளே வர அனுமதியே இந்த நிலை வாசல் தான் தர வேண்டும் என்று ஒரு கருத்து உண்டு. அந்த வகையில் நிலை வாசலில் நாம் செய்யக்கூடிய இந்த சிறு மாற்றம் நம் நம்முடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -