- Advertisement -

கலியுகத்தில், மக்கள் கடன் பிரச்சனையால் அவதிப்படக்கூடிய நிலைமை வரும் என்பது, அந்த காலத்திலேயே சித்தர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் இந்த மைத்ரேய முகூர்த்தம் என்ற அர்புத நேரத்தை நமக்காக கண்டுபிடித்து சொல்லி வைத்து சென்று உள்ளார்கள். கடனாக வாங்கிய தொகையை இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுக்கும் போது, அந்த கடன் பிரச்சனை சீக்கிரம் அடையும் என்பது நம்பிக்கை.

மைத்ரேய முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி நிறைய பேர் தங்களுடைய கடன் பிரச்சனையிலிருந்தும் வெளிவந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மே மாதத்தின் மைத்ரேய முகூர்த்தம் எப்போது வருகிறது என்பதை பற்றிய தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மே மாதம் மைத்திரேய முகூர்த்தம்

06-05-2024 திங்கட்கிழமை காலை 7:30 – 8:30 மணி வரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. 07-05-2024 செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 – 1:30 மணி வரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. 23-05-2024 மாலை 6:30 – 7:30 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம் இருக்கிறது. இந்த கடைசி மைத்ரேய முகூர்த்த நேரத்தில் பௌர்ணமி திதியும் சேர்ந்து வந்திருப்பதால் இது ரொம்ப ரொம்ப சிறப்பு.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நீங்க வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் அந்த கடன் சீக்கிரம் அடையும். உதாரணத்திற்கு 2,00,000 உங்களுக்கு கடன் இருக்கிறது. அந்த கடனை சீக்கிரமாக அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த குறிப்பிட்ட மைத்ரேய முகூர்த்த நேரத்தில் கடன் தொகை 2,00,000 ரூபாயில், வெறும் 2,000 ரூபாயை நீங்கள் திருப்பிக் கொடுத்தாலும் போதும்.

- Advertisement -

அந்த இரண்டு லட்ச ரூபாய் கடன், சீக்கிரம் அடையும் அதுதான் இந்த நேரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். இரண்டு லட்ச ரூபாய் கடன் தொகைக்கு, வெறும் 2000 ரூபாய் கடனை திருப்பிக் கொடுத்தால் கட்டாயமாக கடன் கொடுத்தவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதனால் ஒரு வெள்ளைக் கவரை எடுத்துக் கொள்ளவும். அதன் மேலே நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அவர்களுடைய பெயரை எழுதுங்கள்.

அந்த கவருக்குள் 2000 ரூபாயை வைத்து மடித்து பத்திரமாக வைத்து விடுங்கள். இதற்கு என்ன அர்த்தம். நீங்க கடன் வாங்கினவர்கள் கையில் இந்த 2000 கொடுத்ததாக அர்த்தம். இதேபோல மைத்ரேய முகூர்த்தம் வரும் போதெல்லாம் ஒரு தொகையை அந்த கவருக்குள் வைக்கலாம். இந்த பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களிலேயே, அந்த இரண்டு லட்ச ரூபாய் கடனும் மொத்தமாக திருப்பி அடைக்க கூடிய யோகம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக தொகை உங்களுக்கு கிடைக்கும் போது, கவரில் போட்டு வைத்திருந்த பணத்தை இந்த பணத்தோடு சேர்த்து கடன் காரர்களுக்கு கொடுத்து விட வேண்டும். ஒரே ஒருமுறை இந்த நேரத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன். இதில் நஷ்டமடைவதற்கு எதுவுமே இல்லை. நம்பிக்கை மட்டும் தான் முதலீடு.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு

உங்களுடைய கஷ்டங்கள் குறைவதற்காக கடவுளே வந்து இந்த பரிகாரத்தை சொன்னதாக நினைத்து முயற்சி செய்து பாருங்கள். கடன் இல்லாத வாழ்க்கையை சீக்கிரம் வாழ உங்களுக்கு நேரம் காலம் கைக்கூடி வரும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -