வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு

saibaba
- Advertisement -

வியாழக்கிழமை அன்று சாய்பாபாவை வழிபாடு செய்யக் கூடிய பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. காரணம் சாய்பாபா தன்னுடைய பக்தர்களுக்கு நிகழ்த்திக் காட்டும் அதிசயங்கள் தான். கஷ்டம் என்று வந்தவர்களை சாய்பாபா கைவிடுவது கிடையாது. உங்களுடைய வாழ்விலும் வெளியில் சொல்ல முடியாத துன்பங்களும் துயரங்களும் இருக்கிறதா.

வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சாய்பாபாவை இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். சாய்பாபா நடத்தும் அதிசயங்களை நீங்களும் உணருவீர்கள். பிறகு உங்களுடைய குருவாக சாய்பாபாவை ஏற்றுக் கொண்டு அவர் வழி பயணம் செய்வீர்கள். வியாழக்கிழமை வீட்டில் இருந்தபடியே சாய்பாபாவை எப்படி வழிபாடு செய்யலாம் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்தது தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு வீட்டில் சின்னதாக சீரடி சாய்பாபாவின் திரு உருவப்படமுமோ, சிலையோ இருக்க வேண்டும். ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, இந்த சாய்பாபாவை ஒரு மன பலகையில் அமர வைத்து, அந்த படத்தை துடைத்து சந்தன குங்குமப்பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

சாய்பாபாவுக்கு வாசம் நிறைந்த ஊதுவத்தி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இரண்டே இரண்டு ஊதுவத்தி பொருத்தி வைத்து விடுங்கள். சாய்பாபாவுக்கு இரண்டு சாக்லேட் வைத்து நெய்வேத்தியம் செய்தாலும் போதும். உங்களால் முடிந்த நெய்வேதியம் வைத்து விளக்கு ஏற்றி பூஜை அறையில் ஓம் வரைந்து சாய்பாபாவை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

சாய்பாபா வழிபாட்டிற்கு இதை தமிழில் ஓம் என்ற வார்த்தையை கொண்டு எழுதக்கூடாது. ஹிந்தியில் ஓம் என்ற வார்த்தையை வரைந்து கொள்ளுங்கள். மேலே சாய்பாபா புகைப்படத்திற்கு பக்கத்திலேயே அந்த வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தை பார்த்து உங்களுடைய வீட்டிலும் ஓம் வரைந்து, சாய்பாபா முன்பாக சிறிது நேரம் அமர்ந்து ‘சாய்ராம் சாய்ராம்’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்பூர ஆராத்தி காண்பித்து உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டின் போது மனம் உருகி உங்களுடைய கஷ்டத்தை சாய்பாபாவிடம் சொல்லுங்கள். ஒரு தந்தையிடம் கஷ்டத்தை சொல்வது போல நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். இந்த வழிபாடை வியாழக்கிழமை தோறும் தொடர்ந்து செய்து வந்தால் சாய்பாபாவை முழுமையாக நம்பியவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்காது. இந்த வழிபாட்டை நீங்கள் தொடங்கிய பின்பு சாய்பாபா பல அதிசயங்களை உங்களுடைய வாழ்க்கையில் நடத்திக் காட்டிவிடுவார். அதற்கு பின்பு நீங்களே நினைத்தாலும் இந்த வழிபாட்டை தவறவிட மாட்டீர்கள்.

- Advertisement -

இரண்டு வாரம் வியாழக்கிழமை வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை. சாய் பாபாவை ஒரு கூடையில் வைத்து எடுத்துச் சென்று நீங்கள் இருக்கும் இடத்தில் அந்த சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை பூஜை செய்வீர்கள். அவ்வளவு அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கத் தொடங்கிவிடும். இதையெல்லாம் சொல்லும்போது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய காத்த விராயன் மந்திரம்

ஆனால் சாய்பாபாவை வழிபாடு செய்யும் பக்தர்களை கேட்டுப்பாருங்கள் இதற்கு பின்னால் மறைந்திருக்கும் அதிசயம் என்ன என்று தெரியும். அந்த அதிசயத்தை நீங்கள் உணர வேண்டும் என்றால் நாளை முதல் இந்த வழிபாட்டை தொடங்குங்கள். நீங்களே சாய்பாபாவின் சக்தியை புரிந்து கொள்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -