- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முகச்சுருக்கத்தை நீக்கும் ஃபேஸ் பேக்.

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவ்வாறு இளமையாக இருப்பதற்கு பல வழிமுறைகளை பின்பற்றினாலும் இயற்கையான முறையில் தங்கள் முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த இளமை என்றும் நிரந்தரமாக இருக்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எப்படி முகச்சுருக்கத்தை நீக்குவது என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக முகச்சுருக்கம் என்பது இரண்டு வகைகளில் ஏற்படும். ஒன்று முதுமை ஏற்படக்கூடிய சுருக்கம். இது வயதாகும் காரணத்தால் சருமத்தில் இருக்கக்கூடிய நீர் சத்துக்கள் குறைந்து சுருக்கம் ஏற்படும். மற்றொன்று இளமையிலேயே ஏற்படக்கூடிய சுருக்கம் இதுவும் போதிய அளவு நீர்ச்சத்து உடலின் இல்லாமல் தோல் வறண்டு போய் சுருக்கம் ஏற்படுவது. எந்த வயதாக இருந்தாலும் சுருக்கத்தை நீக்குவதற்கு செய்ய வேண்டிய எளிய ஃபேஸ் பேக்கை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய வெந்தயம் மிகவும் உதவி செய்கிறது. வெந்தயத்தில் இயற்கையாகவே இருக்க கூடிய சத்துக்கள் தோல் சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தையும் பெற உதவுகிறது. முதலில் வெந்தயத்தை வெயிலில் நன்றாக காய வைத்து அதை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தய பொடியை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த விழுதியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பன்னீர், ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் மற்றும் ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழ சாறு இவை மூன்றையும் கலந்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு உருவாக்க வேண்டும். இந்த பேஸ்டை முகத்தை நன்றாக கழுவிய பிறகு கீழிருந்து மேலாக தடவ வேண்டும். இந்த பேக்கை முழுமையாக காய வைக்கக்கூடாது. சிறிது ஈரம் இருக்கும் போதே கழுவி விட வேண்டும். அதனால் 15 நிமிடம் வரை மட்டுமே முகத்தில் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம்.

- Advertisement -

இதில் சேர்ந்திருக்கும் அனைத்து பொருட்களும் நமது தோலிற்கு மிகவும் நன்மை தரும் பொருட்களாக இருக்கிறது. இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சுருக்கமாக இருந்தாலும் அந்த சுருக்கம் நீங்கி இயற்கையான இளமை தோற்றத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: 15 நாட்களில் முடி உதிர்ந்த இடங்களில் இரட்டிப்பாக வளர

கெமிக்கல்கள் நிறைந்த கிரீம்களை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக இயற்கை அன்னை தந்த பொருட்களை வைத்து இயற்கையாகவே இளமையாக வாழ முடியும்.

- Advertisement -