15 நாட்களில் முடி உதிர்ந்த இடங்களில் இரட்டிப்பாக வளர

hair vendhiyam
- Advertisement -

இப்போதெல்லாம் முடி உதிர்வு பிரச்சனை என்பது அனைவரும் சந்திக்கக் கூடிய ஒன்றாகி விட்டது. பொதுவாக ஒரு நாளில் 50 முடி வரை உதிர்வது சாதாரணம் தான். அதையும் மீறி முடி உதிர்ந்தால் தான் நாம் அதைப்பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக ஒரு சிலருக்கு கொத்துக் கொத்தாக முடி உதிரும். அது மட்டும் இல்லை தலையில் பூச்சி வெட்டு போல ஆங்காங்கே முடிகள் உதிரும்.

இந்தப் பிரச்சினைகளை ஆரம்பத்திலே நாம் சரி செய்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவற்றை சரி செய்து முடி வளர்ப்பது பெரிய சிக்கலாகி விடும். முதலில் முடி உதிர்வுக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அத்துடன் நிம்மதியான தூக்கம் சாப்பாடு, சரியான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி முடிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது தலைமுடி எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்றவற்றை செய்ய சரியாக வேண்டும்.

- Advertisement -

இவற்றுடன் எப்போதும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். இவற்றையெல்லாம் சரியாக செய்தும் கூட சிலருக்கு முடி உதிர்வு இருக்கும். அப்படியானவர்களுக்கு இந்த எண்ணெய் ஒரு நல்ல தீர்வாக அமையும். இது முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்களும் பயன்படுத்தலாம் நல்ல பலனைத் தரும். அந்த எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வை கட்டுப்படுத்த

முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த எண்ணெய் தயாரிக்க முதலில் கொஞ்சம் வெந்தயத்தை எடுத்து ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். வெந்தயத்தை எப்படி அரைத்தாலும் கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும். ஆகையால் இதை அரைத்து நன்றாக ஜலித்து எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஜலித்த வெந்திய பொடியில் இருந்து நான்கு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது விளக்கெண்ணெய்யில் நான்கு டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு எட்டு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

விளக்கெண்ணெய்யின் அதிக குளுமை ஒத்துக் கொள்ளாது என்பவர்கள். அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் எட்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஆக மாற்றி கலந்து கொள்ளுங்கள். இதில் விளக்கெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் என எதை வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து கலந்த இந்த எண்ணையை சூரிய ஒளி படும் இடத்தில் மூன்று நாட்கள் வரை வைத்து எடுங்கள். உங்கள் வீட்டில் சூரிய ஒளி படாத பட்சத்தில் இதை டபுள் வாயில் முறையில் சூடாக்கி வைத்து விடுங்கள். எப்படி இருந்தாலும் மூன்று நாட்கள் இந்த எண்ணெய் அப்படியே இருக்க வேண்டும். அப்போது தான் வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் எல்லாம் எண்ணெயில் முழுமையாக கலந்து கிடைக்கும்.

இந்த எண்ணையை நீங்கள் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மறுபடியும் ஒரு முறை டபுள் வாயில் முறையில் சூடு செய்த பிறகு தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சேர்க்கை சேர்த்து தலையை அலசி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: முகத்தை பிரகாசமாக உதவும் ஆரஞ்சு பேஷியல்.

இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்தால் போதும். இரண்டே வாரத்தில் முடி உதிர்வு முழுமையாக நிற்பதுடன் உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடிகள் நன்றாகவே வளர ஆரம்பித்திருக்கும். பூச்சி வெட்டுக்களால் முடி உதிர்வு இருந்தால் கூட அந்த இடங்களிலும் முடிகள் முளைக்கும் இந்த எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -