- Advertisement -

செவ்வாய்க்கிழமை மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதி அற்புதம் வாய்ந்த நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில், ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்தாலும், அந்த கடன் கூடிய சீக்கிரத்தில் முழுமையாக அடையும் என்பது தான் நம்பிக்கை.

நாளைய தினம் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில், மைத்ரேய முகூர்த்த நேரமானது வந்திருக்கிறது. நாளைய தினம் முருகப் பெருமானை நினைத்து இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கடன் சுமை குறையும். நாளைய தினம் எந்த நேரத்தில் மைத்திரியை முகூர்த்த நேரம் வருகிறது. அந்த நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன பதிவை தொடங்க படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

7-05-2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:29 மணியிலிருந்து, 6:16 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம் இருக்கின்றது. பிரம்ம முகூர்த்த நேரத்தில், இந்த மைத்ரேய முகூர்த்தம் நேரம் வந்திருப்பது இன்னும் கூடுதல் சிறப்பானது. நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள்.

இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில், பூஜையறையில் முருகருக்கு உகந்த வெற்றிலை தீபம் ஏற்றி வைக்கவும். ஒரே ஒரு வெற்றிலைக்கு மேலே தீபம் ஏற்றினாலும் சிறப்பு. ஆறு வெற்றிலைக்கு மேலே ஒரு தீபம் ஏற்றி வைத்தாலும் சிறப்பு. அது உங்களுடைய விருப்பம். பிறகு உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முருகரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து, இந்த துவரம் பருப்பை ஒரு சிவப்பு துணியில் போட்டு முடிச்சாக கட்டி முருகரின் திரு உருவப்படத்தின் பக்கத்தில் வைத்து விடுங்கள்.

பிறகு பரிகாரத்தை செய்து முடித்த உடனேயே, நீங்க யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அவர்களுக்கு ஒரு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். இது அதிகாலை நேரமாக இருப்பதால், நீங்கள் பணத்தை குறிப்பிட்ட நபருடைய வங்கிக் கணக்கில் Gpay செய்யலாம் தவறு கிடையாது. அதுவும் முடியாது என்பவர்கள் ஒரு வெள்ளை கவரில் நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அவர்களுடைய பெயரை எழுதி, அந்த கவருக்குள் 101 ரூபாயை வைத்து விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவுதான். அந்த கடன்காரருக்கு நீங்கள் கடனை திருப்பி கொடுத்ததாக அர்த்தம். நாளைய தினம் மைத்ரேய முகூர்த்த நேரத்தில் முருகப்பெருமானை நினைத்து, உங்களுடைய கடனை அடையுங்கள். நிச்சயம் உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். செல்வ செழிப்பு படிப்படியாக உயரும்.

இதையும் படிக்கலாமே: கடன் கரைய அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

சரிங்க, முருகரின் பாதத்தில் ஒரு கைப்பிடித்து துவரம் பருப்பை வைத்தோமே, அதை என்ன செய்வது. அதை மறுநாள், அதாவது புதன்கிழமை எடுத்து காக்கை குருவிகளுக்கு இறையாக போடலாம். இல்லையென்றால் பசு மாட்டிற்கு அந்த துவரம் பருப்பை சாப்பிட கொடுத்து விடுங்கள். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நாளைய தினம் செய்து பாருங்கள். முருகப்பெருமானின் அருள் ஆசியோடு நீங்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள்.

- Advertisement -