- Advertisement -

இவர்கள் கையில் இருந்து இந்த நேரத்தில் ஒரே ஒரு ரூபாயை வாங்கி பாருங்கள். அப்பறம் என்ன ஜாக்பாட் அடித்தது போல பணமழை பொழிய தொடங்கி விடும்.

நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த பழக்கம் உண்டு. அதாவது அவர்களுக்கு ஒரு சில ராசியானவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அவர்கள் கையால் கொடுத்து வாங்கி செய்வார்கள். அதே போல் பணவரவு அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும் அவர்களிடம் இருந்து முதலாக ஒரு ரூபாயாவது பெற்று அதன் பிறகு எதையும் ஆரம்பிப்பார்கள். இதைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவிலும் இதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணம் கையில் தாராளமாக புழங்க செய்ய வேண்டியது
நாம் யார் கையில் இருந்து எந்த நேரத்தில் பணம் வாங்கினால் நம்முடைய பணவரவு அதிகரிக்கும் என்பது பற்றிய தகவலை தான் இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் நாம் தெளிவாக நினைவில் கொள்ள வேண்டும். இதை பார்ப்பதற்கு முன்பாக அந்த நபருடைய ஜாதகம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் அந்த நபர் நம் குடும்பத்து உறுப்பினரோ அல்லது நண்பர்களாகவோ தான் இருக்க முடியும்.

- Advertisement -

யார் ஒருவருடைய ஜாதகத்தில் மூன்றாவது இடத்தில் சுக்கிர பகவான் பலம் பெற்று இருக்கிறாரோ அவர்களிடம் தான் நாம் பணத்தை பெற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ராசியிலும் சுக்கிர பகவான் இருப்பார் ஆனால் எல்லா ராசியிலும் அவர் பலம் பெற்று இருக்க மாட்டார். ஒரு சில ராசியில் பலம் குறைந்தும் ஒரு சிலர் ராசியில் நீச்சமடைந்தும் இருப்பார். அது போன்ற சமயங்களில் இந்த முறையை நீங்கள் முயற்சி செய்தால் பலிக்காது.

யார் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர திசையானது நல்ல பலத்துடன் இருந்து அவர்களுக்கு சுக்கிர யோகம் இருக்கிறதோ அந்த நபருடைய கைகளில் இருந்து சுக்கிர ஹோரையில் நீங்கள் பணத்தை வாங்க வேண்டும். அது ஒரே ஒரு ரூபாயாக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அந்த நபரின் கையில் இருந்து தான் பணத்தை வாங்க வேண்டும். இப்படி வாங்குவதால் அந்த நபருக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விடுமா என்று பயம் கொள்ள தேவையில்லை. அவர்களுடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் வலுவாக இருப்பதால் அவர்களுக்கு எந்த கேடும் நிகழாது.

- Advertisement -

இதை கொஞ்சம் ஜாதக விஷயம் தெரிந்தவர்கள் பின்பற்றுவது நல்லது அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களின் ஜாதகத்தை நீங்கள் அவ்வப் போது பார்த்து வந்தால் இந்த சுக்கிர திசை போன்றவற்றை சரியாகத் தெரிந்து கொண்டு அந்த நேரத்தை உங்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை தான் நாம் முன் காலத்தில் இருந்து இவர்கள் ராசியானவர்கள் இவர்கள் ராசி அல்லாதவர்கள் என்று ஒரு பொதுவான கருத்தால் சொல்லி வருகிறோம். இவர்களுடைய இந்த நேரம் தான் இந்த ராசிக்கு காரணம். ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாக மாற கூடிய வரும் அவருக்கே சில நேரத்தில் தொடங்கும் காரியம் சரிவர நடக்காமல் போகலாம். அப்படியானால் இவையெல்லாம் ஜாதகத்தில் இந்த திசை அடிப்படையாக வைத்து நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர தோஷம் விலக, பணக்கஷ்டம் தீர, செய்ய வேண்டிய தண்ணீர் பரிகாரம். 1 டம்ளர் தண்ணீரால் உங்கள் தலையெழுத்தையே மாற்றலாம்.

இந்த தகவல் இது வரை யாருக்கும் தெரியாததாக இருக்கலாம் தெரிந்தவர்கள் பின்பற்றி இருப்பார்கள். இது தெரியாதவர்கள் இந்த முறையை நீங்களும் பின்பற்றி உங்களுடைய பணவரவிற்கும் முன்னேற்றத்திற்கும் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களோ உங்களுடைய சொந்தங்களோ நண்பர்களோ யாரோ ஒருவர் இருப்பார் எனில் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் இதன் மூலம் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை என்பதை மறுபடியும் கவனத்தில் கொள்வோம்.

- Advertisement -