சுக்கிர தோஷம் விலக, பணக்கஷ்டம் தீர, செய்ய வேண்டிய தண்ணீர் பரிகாரம். 1 டம்ளர் தண்ணீரால் உங்கள் தலையெழுத்தையே மாற்றலாம்.

sukkiran
- Advertisement -

பணம் சேர வேண்டும் என்றால், அந்த சுக்கிர பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும். இது நாம் எல்லோருக்கும் தெரியும். சுக்கிர யோகம் இருக்குதுப்பா இவனுக்கு. எங்கிருந்துதான் பணம் கொடுத்ததோ தெரியல. இவ்வளவு சீக்கிரத்தில், இவ்வளவு பெரிய பணக்காரன் ஆகிவிட்டான் என்ற பொதுவான வார்த்தைகளை அடுத்தவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நமக்கும் இந்த சுக்கிர யோகம் அடிக்கவும், ஜாதக கட்டத்தில் நமக்கு இருக்கும் சுக்கிர தோஷம் விலகவும் என்ன பரிகாரம் செய்வது.

அந்த காலத்திலேயே நம்முடைய பாட்டி அம்மாக்கள் எல்லாம் இதை பரிகாரம் என்று தெரியாமல் செய்து வந்தார்கள். ஆனால், இன்று இந்த பழக்கத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றோம். அதை கொஞ்சம் நினைவு கூர்ந்தாலே சுக்கிர பகவானின் அருள் ஆசி கிடைக்க பெறும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும்.

- Advertisement -

சுக்கிர யோகம் பெற செய்ய வேண்டிய தண்ணீர் பரிகாரம்:
அந்த காலத்தில் குடும்ப தலைவிகள் இரவு தூங்கு செல்வதற்கு முன்பு ஒரு சொம்பு நிறைய தண்ணீரும், அந்த தண்ணீரை குடிப்பதற்கு ஒரு டம்ளரையும் அதன் மேலே வைத்து எடுத்து, படுக்கின்ற அறைக்கு செல்வார்கள். இரவு படிக்கின்ற அறையில் தண்ணீர் இல்லாமல் இருக்கவே இருக்காது. இரவு தூங்கும் சமயத்தில் யாருக்காவது தாகம் எடுத்தால் இந்த தண்ணீரை குடிப்பார்கள்.

இதற்கு பின்னால் ஒரு ஜோதிடம் சாஸ்திரமும் மறைந்திருக்கிறது. படுக்கையறை என்பது ஜோதிடத்தில் பன்னிரண்டாம் பாகமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சுக்கிர பகவான் நீச்சமாகி இருந்தால்தான், பணக்கஷ்டம் வரும். அதை சரி செய்ய, அந்த இடத்தில் சந்திரனுக்கு உரிய நீரைக் கொண்டு போய் வைத்தால் அந்த தோஷம் விலகி விடும். சுக்கிர தோஷத்தை விளக்கக்கூடிய வேலையை இந்த சொம்பு தண்ணீர் செய்து விடும்.  மறுநாள் காலை எழுந்தவுடன் இந்த சொம்பில் மீதம் இருக்கும் தண்ணீரை வீட்டிற்கு வெளியே இருக்கும் துளசி செடி, தொட்டாசினிங்கி செடி, மருதாணி செடிக்கு ஊற்றி வர உங்களுடைய பணக்கஷ்டம் தீரும். சுக்கிர யோகம் அடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

எளிமையான குறிப்பு தான் வீட்டுக்கு வெளியே இப்படிப்பட்ட செடிகள் இல்லை என்றாலும் ஒரு சின்ன தொட்டியில் செடியை வாங்கி வையுங்கள். துளசி செடியில் கூட இந்த தண்ணீரை ஊற்றலாம். அந்த சொம்பு தண்ணீரை நாம் எச்சில் செய்து குடிக்க போவது கிடையாது. டம்ளரில் ஊற்றித்தான் குடிக்க போகின்றோம். மீதம் இருக்கும் தண்ணீரை சுக்கிர பகவானை நினைத்து செடி கொடிகளுக்கு ஊற்றி வர சுக்கிர தோஷம் விலகும்.

இதையும் படிக்கலாமே: வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் நிற்க வேண்டுமா? இந்த விநாயகரை கொண்டு வந்து வீட்டில் வச்சுக்கோங்க. எந்த தோல்வியும் உங்களை நெருங்காது.

அதேபோல வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில், வெள்ளை நிறத்தில் இருக்கும் மொச்சை கொட்டையை வீட்டிற்கு வாங்கி வந்தாலும் சுக்கிர யோகம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மொச்சைக்கொட்டை வாங்குபவர்கள் வீட்டில் நிச்சயம் பணக்கஷ்டம் வராது. இந்த ஆன்மீகம் பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக சுக்கிர பகவானின் அருளாசியை பெற்று பணக்காரராகும் யோகத்தை பெறுவீர்கள்.

- Advertisement -