இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.
மேலும், ஹர்டிக் பாண்டியா போட்டியின் திருப்புமுனையாக அமைந்த ராஸ் டெய்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டி குறித்து பாண்டியா சகோதரர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதோ ஹார்டிக் பாண்டியாவின் பதிவு :
குருனால் பாண்டியாவின் பதிவு :
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்