- Advertisement -

செல்வம் பெருக சஷ்டி திதியில் செய்ய வேண்டிய வழிபாடு

முருகருக்கு உகந்த வழிபாட்டு தினங்களில் சஷ்டி மிகவும் முக்கியம். இது அமாவாசை பௌர்ணமியை தொடர்ந்து வரும் ஆறாவது நாளில் இந்த சஷ்டி திதி யானது வரும். சஷ்டி என்பது ஆறு என்ற பொருளைக் குறிக்கிறது. ஆறுமுகனை இந்த நாளில் நாம் வணங்கும் போது நம்முடைய அனைத்து இன்னல்களையும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. அப்படியான இந்த சஷ்டி திதியில் நம்முடைய பணப்பிரச்சனை தீர எப்படி வழிபாடு செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

பணப்பிரச்சனை தீர்ந்து பணவரவு அதிகரிக்க வழிபாடு

முருகனை வழிபட பல வழிபாட்டு நாட்கள் இருந்தாலும் கூட இந்த சஷ்டி திதியில் வணங்குவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஐப்பசியில் வரக்கூ டிய சஷ்டியானது கந்த சஷ்டி என்று சொல்லப்படுகிறது. கந்த சஷ்டியின் போது ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வார்கள். இப்போது நாம் மாதந்தோறும் வரக்கூடிய சஷ்டியில் முருகரை எளிமையாக வழிபட்டு நம்முடைய ஏழ்மை நிலையை எப்படி மாற்றிக் கொள்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு இந்த வழிபாடு செய்யும் நேரம் சஷ்டி திதி இருக்க வேண்டும் அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முருகர் படத்திற்கு முன்பாக முதலில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள் இந்த தீபம் ஆறு தீபமாகவோ வெற்றிலை தீபமாகவோ ஏற்றினால் மிகவும் சிறந்தது. அப்படி நீங்கள் வெற்றிலை தீபம் ஏற்றுவதாக இருந்தால் முருகனுக்கு உகந்த சற்கோன கோலமிட்டு அதன் மேல் வெற்றிலையை வைத்து ஏற்றுங்கள்.

அதன் பிறகு முருகனுக்கு உகந்த செவ்வரளி மாலையில் சூட்டுங்கள். நெய்வேதியமாக தினை மாவு கலந்து வையுங்கள் இல்லையெனில் உங்களால் முடிந்த வேறு ஏதும் ஒரு எளிமையான நெய்வேதியத்தை கலந்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து ஒரு துண்டு சுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இந்த சுக்கு உங்கள் வீட்டில் இருப்பதையே கூட பயன்படுத்தலாம். அடுத்து ஒரு மஞ்சள் நிற கயிறு இந்த மஞ்சள் நிற கயிறு வேண்டும். இதற்கு தாலி கயிறு பயன்படுத்த கூடாது.

- Advertisement -

இப்போது முருகர் படத்திற்கு முன்பாக ஏற்றிய தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த சுக்கைஅந்த மஞ்சள் கயிறு கொண்டு நன்றாக அதைக் காப்பு போல கட்டி விடுங்கள். இப்போது உங்கள் கைகளில் வைத்து நன்றாக இருக்க மூடிக் கொண்டு முருகரை மனதார நினைத்து உங்களுடைய பணப் பிரச்சனை முதல் அனைத்தும் தீர வேண்டும் என்று ஓம் சரவண பவ என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜையை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவர்கள் பகிர்ந்து உண்ணுங்கள். இந்த சுக்கானது குறைந்தது ஒரு மணி நேரம் வரை முருகரின் படத்தின் அருகில் வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த சுக்கை நீங்கள் பணம் வைக்கும் இடம் இடத்தில் வைத்து விடுங்கள். வியாபாரம் செய்பவராக இருந்தால் தொழில் செய்யும் இடங்களிலும் வைக்கலாம்.

- Advertisement -

இதை காப்பு போல் நம் கைகளில் கட்டி இருந்தாலும் நல்ல பண வரவை ஏற்று தரும் ஆனாலும் எல்லா நேரத்திலும் இது கைகளில் இருப்பது நல்லதல்ல. ஆகையால் இது போன்ற இடத்தில் இதை வைத்து விடுங்கள். இதற்கு ஏதேனும் ஒரு சஷ்டியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அது தேய்பிறை சஷ்டி அல்லது வளர்பிறை சஷ்டி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் மாதந்தோறும் ஒரு முறை இந்த சுக்கை மாற்றி வைத்துக் கொண்டே இருங்கள்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க ராகுகால பரிகாரம்

சுக்குக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்ற பழமொழியை பலரும் அறிந்திருப்பீர்கள். அத்தகைய சக்தி வாய்ந்த சுற்றிக் கொண்டும் சுப்பிரமணியரை கொண்டும் செய்யப்படும் இந்த பரிகாரமானது உங்களுடைய பணவரவில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி உங்கள் வாழ்க்கையை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தி காட்டும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் இதை செய்து பலனடையலாம்.

- Advertisement -