வேலை கிடைக்க ராகுகால பரிகாரம்

raghu getting job
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் முக்கியமான ஒரு பிரச்சனை எனில் வேலை இல்லாதது தான் சொல்ல வேண்டும். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே பலருக்கும் உள்ளது தான். இதில் இளைஞர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். கஷ்டப்பட்டு படித்து ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற ஆவலுடன் இருப்பவர்கள் படித்து முடித்த பிறகு அதற்கான வேலை கிடைக்காமல் இருந்தால் எத்தனை கஷ்டம்.

இன்னும் சிலருக்கு இருக்கும் வேலை விட இன்னும் நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பார்கள் அல்லது அதிக சம்பளத்திற்கான வேலை தேடிக் கொண்டிருப்பார்கள். பொதுவாகவே வேலை தேடுபவர்களும் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு விண்ணப்பவர்களும் குறிப்பிட்ட காலத்தில் அதை செய்தால் நிச்சயம் பலன் தரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

- Advertisement -

வேலை கிடைக்க ராகுகால பரிகாரம்

பொதுவாக நம்முடைய நாட்களில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறோம். இதில் கெட்ட நேரம் என்பது ராகு காலம் எமகண்டம் போன்றவற்றை குறிப்பிடுகிறோம். ஆனால் நம்முடைய வேலை தொடர்பான விஷயத்தை நமக்கு சாதகமாக மாற்றி தரக் கூடிய காலம் ஒன்று உள்ளது தெரியுமா? .

அது வேறொன்றுமில்லை ராகு காலம் தான். இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். என்ன! ராகு காலத்தில் வேலை தேடி போவதா என்று சிந்திப்பீர்கள். ஆனால் ராகு காலத்தில் கடைசில் 20 நிமிடத்தில் உங்கள் வேலைக்கான முயற்சிகளை எடுத்தால் நிச்சயம் அது நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக வேலைக்கு விண்ணப்பிக்க வகூடியவர்கள் இந்த நேரத்தில் அருகில் இருக்கக் கூடிய ஆலயத்திற்கு சென்றது நவகிரகத்தில் உள்ள ராகு பகவானுக்கு முன்பு விண்ணப்பத்தை வைத்து வழிபட்ட பிறகு விண்ணப்பித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதே போல் வேலை நிமித்தமாக யாரையேனும் சந்திக்க வேண்டியதாக இருந்தால் இந்த நேரத்தில் சென்று சந்தித்தால் நிச்சயம் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது வேலைக்கு மட்டுமல்ல தொழில் வியாபாரம் செய்பவர்கள் அந்த நேரத்தில் தொழில் விருத்தி சம்பந்தமாக யாரேனும் சந்திக்க வேண்டும் என்றாலும் இந்த நேரத்தில் சென்று சந்தித்தால் நிச்சயம் அதற்கான பலன் அதிகமாகவே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக குபேர வழிபாடு

நல்ல காரியங்களை செய்ய தயங்கும் இந்த நேரத்திலும் இப்படியான செயல்களை செய்வதன் மூலம் நம்முடைய செயலுக்கான நல்ல பலன் விரைவில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் உள்ள வித்தியாசமான இந்த தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -