புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. முசாபராபாத் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டை ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களின் மீது வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகம் முழுவதும் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியானாலும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வளவே பெரிய சேதம் எதுவும் இல்லை என்று மழுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது : தி பாய்ஸ் ஹேவ் பிளேயிட் ரியல்லி வெல் என்று பதிவிட்டுள்ளார். அதாவது, நம்ம பசங்க நல்லா விளையாடி இருக்காங்க என்று அர்த்தம். இதோ அந்த பதிவு :
இந்த தாக்குதல் குறித்து இந்திய அணி வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எமது அடுத்தடுத்த பதிவுகளில் நாங்கள் அதனை உங்களுக்காக பதிவிடுகிறோம் நண்பர்களே.
இதையும் படிக்கலாமே :