- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உங்கள் வீட்டில் இந்த வேர் இருந்தால் பணம் தானாக சேரும் தெரியுமா?

நல்ல வழியில் ஈட்டிய செல்வம் எப்போதும் ஒருவரிடம் நிலைத்திருக்கும். கஷ்டப்பட்டு ஈட்டிய செல்வங்களை சிலர் மனமகிழ்ச்சிக்காக சூதாட்டங்கள், பணம் செலுத்தி ஆடப்படும் பந்தயங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு இழக்கின்றனர். ஒரு சிலர் பணத்தை சம்பாதிக்கலாம் என்றெண்ணி லாட்டரி, ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் ஈடுபட்டாலும் அதில் பலருக்கும் எதிர்பார்த்த அளவில் பெரும் செல்வம் ஒன்றும் கிடைத்து விடுவதில்லை. இப்படியான விடயங்களில் பணத்தை இழக்காமல் தடுத்து, பெரும் லாபம் சம்பாதிக்கும் சித்தர்கள் கூறிய தாந்திரீக வழிமுறை ஒன்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சித்தர்கள் கூறும் இந்த வேர் சஞ்சீவி வகை வேர்களில் ஒன்று. இந்த வேர் கிராமங்கள், காடுகளை ஒட்டிய ஊர்களில் வசிக்கும் “செம்பூத்து” பறவை கூடுகளில் இருந்து நாம் பெற முடியும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இந்த வேரை அவ்வளவு சுலபத்தில் நாம் கண்டுபிடித்து விட முடியாது காரணம். இந்த செம்பூத்து பறவை குயில் பறவை போன்றே பிற பறவைகள் கூட்டில் அதிகம் சஞ்சாரம் செய்வதாகும். செம்பூத்து பறவை தனது சொந்த கூட்டில் முட்டையிட்டு அடைகாக்கும் கூடுகளில் இந்த வேரை அப்பறவை சேகரித்து வைக்கும்.

- Advertisement -

செம்பூத்து பறவையின் சொந்த கூடு என்பதை உறுதி செய்த பிறகு, அப்பறவையின் குஞ்சுகள் வளர்ந்து கூட்டிலிருந்து பறந்து செல்லும் காலம் வரை காத்திருக்க வேண்டும். அப்படி செம்பூத்து பறவைகள் கூட்டை காலி செய்த பிறகு உடல் மற்றும் மன சுத்தத்தோடு அப்பறவையின் கூட்டை கொண்டுவந்து நெருப்பு பற்ற வைத்து அதில் அக்கூட்டை போட வேண்டும். அக்கூடு எரியும் போது மற்றவை எல்லாம் எரிந்து விட பச்சை மற்றும் வெள்ளி நிற கலவையில் இருக்கும் ஒரு வேர் மட்டும் எரியாமல் இருக்கும். அதுவே நாம் தேடிய சஞ்சீவி வகை வேராகும்.

இந்த வேரை நாம் நமது பூஜையறையில் வைத்து தினமும் கற்பூரம் காட்டி, தூபங்கள் கொளுத்தி பூஜை செய்து வர வேண்டும். நீங்கள் இந்த வேரை எப்போது தொடும் போதும் உடல், மனம், ஆன்மா ஆகிய திரிகரண சுத்தியுடன் தான் தொட வேண்டும். உடல், மன சுத்தமில்லாதவர்கள் இவ்வேரை தொட்டால் அதன் சக்தி நீங்கி விடும். இந்த வேரை உங்கள் கையிலோ அல்லது பையிலோ வைத்து கொண்டு சூதாட்டம், பணம் கட்டி ஆடப்படும் பந்தயங்கள், ஷேர் மார்க்கெட் எனப்படும் பங்கு சந்தை ஆகியவற்றில் ஈடுபடும் போது உங்களுக்கு தடையில்லாத மிக பெரும் பணவரவுக்கு வழிவகுக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்யும் விண்ட் சைம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Siddhar techniques for money in Tamil. It is also called Panam athigam vara in Tamil or Selvam peruga thanthram in Tamil or Siddhar ragasiyam in Tamil or Mooligai vergal in Tamil.

- Advertisement -