- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சொந்த வீடு கனவு நினைவாக பிரதோஷ வழிபாடு

காக்கை குருவிக்கு கூட சொந்தமாக வீடு இருக்கிறது நமக்கு இருக்கிறதா என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். வாடகைக்கு மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி கொண்டிருப்பவர்கள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி குடியேற முடியாதா என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ கையில் பணம் காசு இருந்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சொந்தமாக இடம் வாங்கவோ அல்லது வீடு வாங்கவோ தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் சிலருக்கோ வீடு கட்ட ஆரம்பித்து ஏதாவது ஒரு சூழ்நிலையில் தடைபட்டு அது முழுமை அடையாமல் இருக்கும். இப்படி சொந்த வீட்டில் குடியேறுவது கனவாகவே இருப்பவர்கள் நாளைய தினம் பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு எந்த பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலில் அதற்குரிய ஆயத்த வேலைகளையும், முயற்சிகளையும் செய்ய வேண்டும். இப்படி முயற்சிகளை செய்தும் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று இருப்பவர்கள் நாளைய தினம் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு சில பொருட்களை வாங்கி தர வேண்டும். அந்த பொருட்களை வாங்கி தருவதன் மூலம் அவர்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். தடைப்பட்டு இருக்கக்கூடிய சொந்த வீடு கனவு நினைவாகும்.

- Advertisement -

புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம் என்பது மிகவும் விசேஷமான பிரதோஷமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய இந்த பிரதோஷ தினம் என்பது இன்னும் பல சிறப்புகள் நிறைந்த தினமாக கருதப்படுகிறது. பொதுவாக பிரதோஷ தினத்தில் அபிஷேகத்திற்காக சிவபெருமானுக்கும் நந்தி பகவானுக்கும் பல பொருட்களை நாம் வாங்கித் தருவோம். அவற்றுள் சில பொருட்கள் குறிப்பிட்ட பலனை நமக்கு தரக்கூடியதாக திகழ்கிறது. அந்த வகையில் சொந்த வீடு கனவை நினைவாக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நான்கு பொருட்களை மறவாமல் நாளைய தினம் சிவபெருமானுக்கு கொடுக்க வேண்டும். அந்த பொருட்களை பற்றி பார்ப்போம்.

முதலில் நார்த்தங்காய் சாறை கொடுக்க வேண்டும். புதன்கிழமையில் சிவபெருமானுக்கு பிரதோஷ நேரத்தில் நார்த்தங்காய் சாரில் அபிஷேகம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கிரக தோஷங்கள் நீங்கும். அடுத்ததாக நந்தி பகவானுக்கு அருகம்புல்லை வாங்கித் தர வேண்டும். அருகம்புல்லை வாங்கித் தருவதன் மூலம் நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

மூன்றாவதாக சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கி தர வேண்டும். இளநீரை நாம் அபிஷேகத்திற்கு வாங்கி தருவதன் மூலம் காரிய வெற்றி உண்டாகும். தடைகள் விலகி ஓடும். கடைசியாக சிவபெருமானுக்கு வெண்தாமரை அதாவது வெள்ளை தாமரையை வாங்கித் தர வேண்டும். இதை வாங்கித் தருவதன் மூலம் நமக்கு இருக்கக் கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே கந்த குரு கவசம் பாடல் வரிகள்

எளிமையான இந்த நான்கு பொருட்களையும் முழுமனதோடு சிவபெருமானை நினைத்து நாளைய தினம் வாங்கி தருவதன் மூலம் சொந்த வீட்டில் குடியேறும் கனவு நினைவாகும்.

- Advertisement -