ஆயிரம் திருநாமங்களுடன் ஆயிரமாயிரம் திருக்கோலங்களில் தலங்கள்தோறும் அருளாட்சி செலுத்துகிறாள் அன்னை ஆதிபராசக்தி. அத்தனை தலங்களிலும் அம்பிகையின் அருளாடல்களுக்கும் அதிசய நிகழ்வுகளுக்கும் குறைவே இல்லை.
மன்மதனிடம் மட்டுமா கரும்பு வில் இருக்கிறது? இதோ காஞ்சியின் அரசியும் கரும்பு வில் கொண்டு காட்சி தருகிறாள். மன்மதனின் கரும்பு வில் மோகத்தைத் தூண்டக்கூடியது என்றால், அம்பிகையின் கரத்தில் இருக்கும் கரும்பு வில்லோ நம் மோகம் அகற்றி, ஆன்மிகத்தில் உயர்நிலை அடையச் செய்கிறது.
மற்றுமோர் தலத்தில் அம்பிகை மேரு வடிவினளாய் காட்சி தருகிறாள். நவராத்திரியை முன்னிட்டு இங்கே அம்பிகைக்கே உரிய தனித்துவமான அடையாளங்களை தரிசிக்கலாம்.
திருமீயச்சூர் லலிதாம்பிகை கொலுசு
மாங்காடு காமாட்சி மகாமேரு
கூத்தனூர் சரஸ்வதி வீணை
கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி
காசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம்
மதுரை மீனாட்சி கிளி
காஞ்சி காமாட்சி கரும்பு
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தாடங்கம்
கொல்லூர் மூகாம்பிகை ஸ்வர்ணரேகை