இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணித்தரப்பில் புஜாரா 193 ரன்களை குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் பண்ட் 159* ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.
இவர்களது இந்த அற்புதமான இன்னிங்க்ஸை கௌரவிக்கும் வகையில் சிட்னி மைதானத்தில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் புஜாரா மற்றும் பண்ட் ஆகியோர் இணைந்துள்ளனர். அவர்களது சாதனை அங்கு எழுதப்பட்டு அதற்கு அருகில் அவர்கள் கையொப்பமிட்டு அந்த வரலாற்று பலகையில் இடம்பிடித்தனர். சிட்னி மைதானத்தில் அதிகபட்ச ரன் ஒரு இன்னிங்சில் அடித்தவர் என்ற சாதனையுடன் சச்சினின் பெயரும் அந்த வரலாற்று பலகையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு இன்று மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தவுடன் நடைபெற்றது. அப்போது புஜாரா மற்றும் பண்ட் ஆகியோர் அந்த வரலாற்று பலகையில் தங்களது கையொப்பமிடும்போது வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :
இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத இந்திய அணி, விராட் கோலி தலைமையிலான அணி இந்த வருடம் முதல் முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனையை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்