Cricket news in Tamil : வலைப்பயிற்சியின் போது அஸ்வின் மற்றும் ஜடேஜா நிறைய ஆலோசனைகளை வழங்குவார்கள் – குல்தீப்

kuldeep 1
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இதுவரை சிறப்பாகவே பந்துவீசி வருகின்றனர்.

kuldeep

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த சுற்று பயணத்தில் ஒருநாள் அணிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா,சாஹல் மற்றும் குலதீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அஸ்வின் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் பந்து வீச்சில் எனக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா எப்போதும் வலைப்பயிற்சியில் அறிவுரைகளை வழங்குவார்கள் என்று இந்திய அணியின் குலதீப் யாதவ் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் குலதீப் யாதவ் இடம்பிடித்து முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட குலதீப் யாதவ் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

kuldeep 2

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி மொத்தம் 6 விக்கெட்டுகளை இழந்தது. அதில், 3 விக்கெட்டுகளை குலதீப் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் மற்றும் ஜடேஜா கொடுத்த அறிவுரைகளே என்னை சிறப்பாக பந்துவீச வைக்கிறது. மேலும், நான் எந்த வேகத்தில் மற்றும் எந்த இடத்தில் பந்து வீசவேண்டும் என்பதையும் அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் என குலதீப் யாதவ் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Cricket news in Tamil : “பைலட்” ஆவது எனது ஆசை. “கிரிக்கெட்” எனக்கு ஏற்பட்ட விபத்து – மாயங்க் அகர்வால்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -