- Advertisement -
பொது பலன்

12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் – ஆகஸ்ட் 13 முதல் 19 வரை

மேஷம்:

செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியினர் இந்த வாரம் முழுவதும் ஈடுபடும் அனைத்திலும் சிறப்பான பயன்களை பெறுவதற்கு விநாயகரையும், வியாழக்கிழமையில் துர்க்கை அம்மனையும் ராகு காலத்தில் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

ரிஷபம்:

ரிஷப ராசியினர் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளைப் பெறுவதற்கு தினமும் மகாவிஷ்ணுவின் படத்திற்கு வாசமுள்ள மலர்கள் சமர்ப்பித்து, விஷ்ணு சகஸ்ரநாமம் துதித்து வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசியினர் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து காரியங்களில் சிறப்பான பலன்களைப் பெறுவதற்கு தினந்தோறும் காலையில் விநாயகப் பெருமானையும், திருப்பதி வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது சிறந்த பலனை ஏற்படுத்தும்.

கடகம்:

கடக ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான நன்மைகள் ஏற்படுவதற்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை சனிபகவானை வழிபாடு செய்வதும் நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சிறப்பான பலன்களை பெறுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய பகவானை வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறமுடியும்.

கன்னி:

புதன் பகவான் ராசியான கன்னிராசியினர் இந்த வாரம் முழுவதும் தாங்கள் ஈடுபடுகின்ற காரியங்களில் வெற்றி பெறவும், அனைத்திலும் சிறப்பான லாபங்களை பெறவும், சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

துலாம்:

சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு தினமும் காலை வேளைகளில் முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் துதித்து முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் பாதகங்கள் ஏதும் ஏற்படாமல், அனைத்திலும் சிறப்பான பலன்களை பெறுவும், லாபங்கள் அதிகரிக்கவும் காலையில் சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபாடு செய்ய வேண்டும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இந்த வார காலத்தில் தங்களுக்கு தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கும், அனைத்திலும் மிகுதியான லாபங்களை பெறுவதற்கும் தினமும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியத்தில் வெற்றியையும், அனைத்து விடயங்களிலும் லாபங்களை பெறுவதற்கும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

கும்பம்:

சனிபகவானுக்குரிய கும்ப ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகளையும், லாபங்களையும் அதிகம் பெறுவதற்கு தினமும் விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபாடு செய்வது நல்லது.

மீனம்:

குரு பகவானுக்குரிய மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து விடயங்களிலும் சிறப்பான நன்மைகளைப் பெறுவதற்கு, தினமும் பெருமாள் மற்றும் தாயாரை வழிபாடு செய்வது நன்மைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Weekly jothida pariharam in Tamil. It is also called as Parigarangal in Tamil.

- Advertisement -
Published by