- Advertisement -

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணமாக வேண்டும், வீடு அமைய வேண்டும், கடன் தீர வேண்டும் இப்படியாக இன்னும் பல வேண்டுதல் கூட இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் நிறைவேற நாம் முயற்சிகள் எடுத்தாலும் தெய்வத்தின் அனுகிரகம் என்ற ஒன்று கட்டாயமாக தேவை.

அந்த அனுகிரகத்தை பெறாத நாம் அனைவரும் வீட்டில் பூஜை செய்வது ஆலயம் சென்று வழிபடுவது போன்றவற்றையெல்லாம் செய்கிறோம் அப்படி செய்யக் கூடிய வழிபாடுகளில் ஒரு சில வழிபாடுகளின் மூலம் நம்முடைய வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற தேங்காய் தீபம்

பெரும்பாலும் நாம் ஆலயம் சென்று வழிபடும் போது தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. அந்த தீபமானது நல்லெண்ணெய் தீபம் நெய் தீபம் என்று ஏற்றுவோம். சில தெய்வங்களுக்கு மட்டும் தான் தேங்காய் தீபம் ஏற்றுவோம். அது வாராகி அன்னை பைரவர் போன்ற தெய்வங்களும் இதில் அடங்குவார்கள். ஆனால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற அம்மன் ஆலயத்திலும் இந்த தீபங்களை ஏற்றலாம் என்று சொல்லப்படுகிறது அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீபத்தை ஏற்று நீங்கள் வெள்ளி அல்லது செவ்வாய் போன்ற தினங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண் தெய்வ வழிபாட்டிற்கு இந்த இரண்டு தினங்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது இதற்கு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆலயத்திற்கு செல்லும் முன்பாக ஒரு தேங்காய், வாழைஇலை, மஞ்சள், குங்குமம், நெய், பஞ்சு திரி, பச்சரிசி போன்றவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

முதலில் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபாடு செய்த பிறகு முடிந்தால் இந்த தீபத்தை அன்னைக்கு முன்பு ஏற்றுங்கள் இல்லை எனில் ஆலயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் ஏற்றலாம் வாழை இலையை பறித்து அதன் மேல் சிறிதளவு பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த அரிசியின் மீது தேங்காய் உடைத்து இரண்டு பாகத்திலும் ஐந்து இடத்தில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதில் நெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக சேர்த்து போடுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்திற்கு முன் அமர்ந்து அன்னையை மனதார நினைத்து வேண்டுங்கள் அந்த நேரத்தில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள் நிச்சயம் அம்மன் அருள்வார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த தீப வழிபாட்டை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்தால் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நடக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. உங்கள் முயற்சியுடன் இந்த தீப வழிபாட்டையும் செய்தால் நிச்சயம் நல்ல பலனை பெறலாம் நம்பிக்கை இருப்பவர்கள் இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -