- Advertisement -

குரு பகவானின் அனுகிரகம் பெற பரிகாரம்

மே மாதம் 2024, 1 ஆம் தேதி தான் குரு பெயர்ச்சியாகி இருக்கிறார். இந்த பெயர்ச்சியில் யாருக்கெல்லாம் குரு பகவான் சாதகமாக இல்லையோ, அவர்களுக்கான ஒரு பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஜாதக கட்டத்தில் குருவால் பிரச்சினை இருந்தால் தான் இந்த விளக்கு போடணும் என்ற அவசியம் கிடையாது.

குரு பகவானின் பரிபூரண ஆசியைப் பெற, யார் வேண்டுமென்றாலும் இந்த விளக்கை ஏற்றலாம். இருந்தாலும் குரு பகவானால் ஜாதக கட்டத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த விளக்கை ஏற்றும் போது, அவர்களின் பிரச்சனை உடனடியாக சரியாகும் என்பது நம்பிக்கை. சரி, குரு பகவானின் ஆசிர்வாதத்தை பெற ஏற்ற வேண்டிய விளக்கை பற்றின தகவலை தெரிந்து கொள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு

வியாழக்கிழமை குரு பகவான் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். நவகிரகத்தில் இருக்கும் குருவுக்கும் இந்த விளக்கை போடலாம். தக்ஷிணாமூர்த்தி சன்னிதானத்திலும் இந்த விளக்கை போடலாம். இதற்கு தேவையான பொருள் ஒரு மண் அகல் விளக்கு, சுத்தமான பசு நெய். பஞ்சதிரி, இரண்டு ஏலக்காய்.

இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அந்த நெய்யில் ஒவ்வொரு ஏலக்காய்களை போட்டு விளக்கு ஏற்றி குரு பகவானுக்கு முன்பு வைத்து பிரார்த்தனை செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் எல்லாம் தீரும். ஜாதக கட்டத்தில் குருபகவான் சரியாக அமரவில்லை என்றாலும் குரு பகவானால் வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு சரியாகும். பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சனை, சாதாரண பிரச்சினையாக உங்களை கடந்து செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மண் அகல் விளக்குக்கு பதிலாக எலுமிச்சம் பழத்தில் இந்த விளக்கை போடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தை வெட்டி அதன் உள்ளே இருக்கும் சாறை எடுத்து அந்த எலுமிச்சம் பழத்தை தலைகீழாக திருப்பி விளக்கு போடுவார்கள் அல்லவா. அதேபோலத்தான் மூன்று எலுமிச்சம் பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.

மஞ்சள் நிற எலுமிச்சம் பழமும் குரு பகவானுக்கு உரிய பழம் தான். மஞ்சள் என்றாலே குரு பகவான் தானே. அந்த எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த நல்லெண்ணெய் உள்ளே ஒரு ஏலக்காய் போட வேண்டும். மூன்று எலுமிச்சம் பழத்தை வெட்டினால் 6 விளக்குகள் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

6 விளக்குகளில் ஒவ்வொரு ஏலக்காயாக போட்டு தீபம் ஏற்றினால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு குரு பகவானுக்கு முன்பாக அமர்ந்து மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த குரு பெயர்ச்சி எங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும், பெரிய அளவில் பாதிப்பு, என் வாழ்க்கையில் வரக்கூடாது என்று பிரார்த்தனை வைக்கவும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் கஷ்டம் வர காரணம்

வாரம் தோறும் வியாழக்கிழமை தவறாமல் இந்த வழிபாட்டை செய்தால் குரு நிச்சயம் உங்களுக்கு கொட்டிக் கொடுப்பார். இந்த இரண்டு பரிகாரங்களில் முதலாவதாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் பரிகாரம் எலுமிச்சை பழ விளக்கு பரிகாரம் தான். எலுமிச்சை பழத்தை விளக்கு போட முடியாத பட்சத்தில் மண் அகலில் விளக்கு போடுங்கள்.

- Advertisement -