- Advertisement -

திரி புஷ்கர யோகம் என்றால் மூன்று மடங்கு நன்மை தரக்கூடிய நாள் என்பது அர்த்தம். அதாவது இன்று நீங்கள் ஒரு நல்ல காரியத்தை செய்தால், அதேபோல நல்ல காரியம் மீண்டும் மூன்று முறை உங்களுக்கு நடக்கும். சில நட்சத்திரங்கள், சில திதிகள் ஒன்று கூடும் போது ஜோதிடத்தில் இந்த திரி புஷ்கர யோகம் என்பது நமக்கு வரும்.

மாதம் தோறும் இந்த யோகம் வரலாம், சில மாதங்களில் இந்த யோகம் வராமலும் இருக்கலாம். இந்த மாதத்தில் இன்றைய தினம் அதாவது 20.4.2024 சனிக்கிழமை திரி புஷ்கர யோகம் இருக்கிறது. இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

திரி புஷ்கர யோகம் 2024

முதலில் நாம் என்ன நல்லதை எல்லாம் இந்த நாளில் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு நீங்கள் தங்கமோ வெள்ளியோ வாங்கினால் மீண்டும் மீண்டும் மூன்று முறை தங்கம் வெள்ளி வாங்கக்கூடிய யோகம் உங்களுக்கு கிடைக்கும். சேமிப்பை இன்று துவங்கினால் மீண்டும் மீண்டும் மூன்று முறை சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

வங்கியில் கணக்கு தொடங்குவது, சீட்டு கட்டுவது, தங்க நகை சீட்டு போடுவது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்யலாம். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது, புது துணி வாங்குவது இப்படி பட்ட விஷயங்களை செய்யும் போது மீண்டும் மீண்டும் அந்த பொருட்கள் உங்களிடத்தில் சேரும். இப்படி உங்களுக்கு மீண்டும் மீண்டும் நடக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய நல்ல காரியத்தை இன்று செய்யுங்கள்.

- Advertisement -

சரி என்னவெல்லாம் செய்யக்கூடாது. இந்த யோகத்தில் கட்டாயம் திருமணம் செய்யக்கூடாது, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது. கடன் வாங்க கூடாது. தேவையில்லாமல் மருத்துவமனைக்கு இன்று செல்லக்கூடாது. அவசரம் என்றால் மட்டும் போங்க. அனாவசியமாக புதுசாக இன்று மருத்துவமனைக்கு சென்று எந்த செக்கப்பும் பண்ணாதீங்க.

இன்றைய நாள் கோர்ட் கேஸ் வழக்குகளை தொடங்காதீங்க. பெரிய அளவில் யாரிடமும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம். இது தவிர நீங்கள் கோவில் குளங்களுக்கு செல்வதாக இருந்தால் செல்லலாம். இன்றைய தினம் யாருக்காவது அன்னதானம் செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த புண்ணிய விஷயங்களை இன்று செய்யலாம். வீட்டில் கணவன் மனைவி சண்டை போடாதீங்க.

இதையும் படிக்கலாமே: செல்வ கடாட்சம் ஏற்பட நிலை வாசல் பரிகாரம்

பகையை வளர்க்கக்கூடாது. சில கஷ்டங்கள் எல்லாம் நம்மை தொடரக்கூடாது என்று நினைப்போம். அப்படிப்பட்ட கஷ்டமான விஷயங்களை இன்று தயவு செய்து செய்ய வேண்டாம். பிறகு அதே போல கஷ்டம் உங்களுக்கு மீண்டும் மூன்று முறை வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இந்த அரிய தகவலை உங்களுக்கு தெரிந்தவர்கள் இடத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த தகவலை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -