செல்வ கடாட்சம் ஏற்பட நிலை வாசல் பரிகாரம்

hanuman nilivasal
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கென ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சனிக்கிழமையான இன்று பெருமாள் ஆஞ்சநேயர் நவகிரக வழிபாடு போன்றவற்றை செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படியான இந்த நாளில் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இருந்து நம் வீட்டிற்கு வரும் ஒரு பொருள் நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செல்வம் பெருக ஆஞ்சநேயர் கோவில் பரிகாரம்

இன்றைய தினம் சனிக்கிழமை இந்த நாளில் ஆஞ்சநேயரை வணங்குவதால் நாம் பலவிதமான நன்மைகளை பெற முடியும். ஆஞ்சநேயர் ஆனவர் தைரியத்தையும் எதிரி தொல்லைகளை நீக்கக் கூடியவர் அது மட்டும் இன்றி காரிய தடைகளை தகர்த்தெறிந்து நம்முடைய வாழ்க்கை வெற்றி மேல் வெற்றி அடைய உறுதுணையாக இருக்கக் கூடியவர்.

- Advertisement -

அப்படியான இந்த ஆஞ்சநேயரை இன்றைய தினம் வணங்கும் போதுஎளிய இந்த சூட்சும பரிகாரத்தை செய்யும் பொழுது நம்முடைய குடும்பம் செல்வ வளத்துடன் வாழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்தான தகவலை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இன்றைய தினம் நான் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு கட்டாயம் ஆக்க செல்ல வேண்டும்.

அப்படி செல்லும் வேளையில் ஆஞ்சநேயருக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியங்கள், அர்ச்சனை பொருட்கள், வெற்றிலை மாலை என உங்களுக்கு எது விருப்பமோ அதை கொண்டு செல்லுங்கள். அதன் பிறகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவருக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். வழிபாடு முடிந்த பிறகு ஆலயத்திலே அரை மணி நேரம் அது அமர்ந்திருந்து அனுமன் சாலிசா படியுங்கள்.

- Advertisement -

இதன் மூலம் சனி தோஷம், கிரக தோஷம் போன்ற சகல தோஷங்களும் நீங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆஞ்சநேயர் வழிபாடு முடிந்த பிறகு ஆலயத்தில் இருந்து சிறிதளவு வெண்ணையை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வெண்ணையை உங்கள் வீட்டின் நிலை வாசலில் வெளிப்புறமாக கொஞ்சமாக தேய்த்து விட்டு மீறி வெண்ணையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சிவன் அருள் பெற பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது

இது ஆஞ்சநேயரின் அருளைப் பெறவும் சகல செல்வத்தை நம் வீட்டிற்கு இருக்கும் செய்யப்படும் ஒரு சூட்சம பரிகாரம் அதுவும் இன்றைய தினத்தில் செய்ய வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆஞ்சநேயரின் அருள் என்றென்றும் கிடைத்து நாம் செல்வ செழிப்புடன் வாழலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த எளிய சூட்சும பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -