- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷம்

சிவ வழிபாடு என்றாலே நமக்கு ஞாபகத்தில் வருவது பிரதோஷ தினம் தான். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவது என்பது அத்தனை பெரிய புண்ணிய பலனை நமக்கு தரும். அப்படியான இந்த பிரதோஷ நாளானது அது வரக் கூடிய நாளை பொறுத்து அதற்கான தன்மைகள் மாறும். அப்படி வரக்கூடிய நாட்களை தெரிந்து அந்த நாளுக்குரிய பலன்களையும் தெரிந்து கொண்டு வணங்கினால் நம்முடைய வழிபாட்டில் கூடுதல் பலனை பெறலாம்.

அந்த வகையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வந்திருப்பது நம்முடைய துன்பங்களை போக்கிக் கொள்ள அருமையான ஒரு நன்னாள். இந்த நாளில் சிவபெருமானை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய சகல துன்பங்களும் தோஷங்களும் நீங்கி இன்பமாக வாழலாம் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

துன்பம் தீர சிவ மந்திரம்

பொதுவாகவே பிரதோஷம் என்றால் நம்முடைய துன்பங்களும் பாவங்களும் தீர்க்கக் கூடிய ஒரு நாள் தான். அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனி ஒரு விசேஷ பலன் உண்டு. இதற்கு காரணம் ஞாயிற்றுக்கிழமை அன்று நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரையான காலம் ராகு காலம் இந்த நேரத்தில் பிரதோஷ காலமும் இணைந்து வருவது மிகப் பெரிய அற்புத பலனை தரும்.

ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீர இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறந்தது. அது மட்டும் இன்றி அந்த நேரத்தில் சிவனின் இந்த ஒரு மந்திரம் போதும் உங்களுடைய சகல துன்பங்களையும் போக்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

- Advertisement -

இன்று பிரதோஷ விரதம் இருந்து செய்பவர்கள் மாலையில் இந்த வழிபாட்டை செய்யலாம் இல்லாதவர்களும் செய்யலாம் ஒன்றும் தவறில்லை. மாலை பிரதோஷ நேரத்தில் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். வீட்டில் சிவலிங்கம், பாலலிங்கம் என எது இருந்தாலும் அவற்றிற்கு இன்று வில்வத்தால் அபிஷேகம் செய்யுங்கள் உங்கள் தோஷங்கள் நீங்கும்.

லிங்கம் இல்லை என்றாலும் பரவாயில்லை படத்திற்கு கொஞ்சம் வில்வ இலையை வைத்து விட்டு எளிமையான ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை சிவபெருமானுக்கு படைத்து விடுங்கள். இப்போது நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்து சிவபெருமானின் இந்த மந்திரத்தை சொல்ல தொடங்குங்கள்.

- Advertisement -

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

என்ற இந்த மந்திரத்தை 11 முறை மட்டும் சொன்னால் போதும் உங்களுடைய சகல தோஷங்களும், பாவங்களும் துன்பங்களும் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. ஓம் சிவாய என்ற ஒரு நாமத்திலேயே நம்முடைய அனைத்து துன்பத்தையும் தீர்க்கக்கூ டிய வல்லமை பெற்றவர் சிவபெருமான். அத்தகைய ஆற்றல்மிக்க பெருமானை இன்றைய பிரதோஷ வேளையில் இப்படி வழிபடுவது சாலச் சிறந்ததாகும்.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க வாராகி வழிபாடு

அதே போல் வாய்ப்புள்ளவர்கள் இந்த வழிபாட்டை முடிந்த பிறகு அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்யுங்கள். அது கோடி புண்ணியத்தை தேடி தரும். இந்த பிரதோஷ வழிபாடும் மந்திரத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து வழிபட்டு பலனை அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -