- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 15-03-2019

மேஷம்:

உற்சாகமான நாள். மாலையில் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்:

வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். மாலை நேரத்தில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் வீட்டில் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் உண்டு.

- Advertisement -

மிதுனம்:

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கடகம்:

சிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:

உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

கன்னி:

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்

- Advertisement -

துலாம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்கவும். தாயின் அன்பும் ஆதரவும் சோர்ந்த மனதுக்கு உற்சாகம் தருவதாக அமையும். உற்சாகமான நாளாக இருக்கும். மாலையில் உறவினர்களுடன் பேசி மகிழும் வாய்ப்பு உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்:

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். நீண்டநாள்களாக கொடுத்து திரும்ப வராமல் இருந்த கடன் தொகை இன்று திரும்பக் கிடைக்கும். கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

தனுசு:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

மகரம்:

பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உற்சாகமான நாள். சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்:

வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by