- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 31-03-2019

மேஷம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மாலையில் நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

கடகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

- Advertisement -

சிம்மம்:

மனதில் உற்சாகம் நிலவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். மகம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

கன்னி:

சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

- Advertisement -

துலாம்:

காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். காரியங்கள் அனுகூலம் உண்டாகும். மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

மகரம்:

காலைப் பொழுது இதமாக விடியும். அன்றாடப் பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். உங்களுடைய அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
- Advertisement -

கும்பம்:

அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்கு மேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமையும்.

மீனம்:

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by