இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை ஆதங்கமாக தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது வீட்டில் ஓய்வினை எடுத்து வருகிறார் இந்த மாத இறுதியில் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளதால் இன்னும் சில நாட்களில் பயிற்சியினை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தருவாயில் விராட் கோலி தனது செல்லப்பிராணியான வீட்டில் இருக்கும் தனது நாயுடன் விளையாடும் படி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் :
உலகக் கோப்பை இந்திய அணி குறித்து அனைவரும் பல கருத்துக்களை கூறிவரும் நிலையில் கோலி தனது முடிவுகளில் உறுதியாக உள்ளார். அணி வீரர்கள் அனைவரது உடற்தகுதி மிகவும் முக்கியம் என்றும் ஏற்கனவே எச்சரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்