Sanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை (3-2) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக கைப்பற்றி இந்திய அணி பழி தீர்த்து கொண்டது. மேலும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதும் அச்சுறுத்தினார்கள் என்றே கூறவேண்டும்.

இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் சாடி வருகின்றனர். உலகக்கோப்பை நெருங்கும் இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து அனைவரும் எதிர்மறையான கருத்துக்களையே கூறிவருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது கருத்தினை தெரிவித்தார்.

- Advertisement -

சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியதாவது : இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான விஜய் ஷங்கர் மற்றும் பண்ட் ஆகியோரது ஆட்டம் மிக மோசமாக அமைந்தது. பந்தினை ஓங்கி அடிக்கவே விரும்புமிவர்கள் பொறுமையாக ஆடி ரன்களை சேகரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. இந்த தொடரில் இந்திய அணியின் வழிகாட்டுதலும் சரியில்லை.

- Advertisement -

மேலும், தொடரின் முதல் இரண்டு போட்டியில் வென்று தொடரை இழந்தது வருத்தமளிக்கிறது. உலகக்கோப்பை தொடரை அருகில் வைத்துக்கொண்டு இந்திய அணி இப்படி ஆடுவது வருத்தமளிக்கிறது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் சாடினார்.

இதையும் படிக்கலாமே :

IPL 2019 : வலைப்பயிற்சியில் தோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்த ஹார்டிக் பாண்டியா – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -