- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

சிதம்பர ரகசியம் என்றால் உண்மையில் என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல ரகசியங்கள் புதைந்துள்ளதாக காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்க்கையில் அங்கு எண்ணிலடங்கா பல ரகசியங்கள் புதைந்திருப்பது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த ரகசியங்களில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மனித உடலை அடிப்படையாக கொண்டு சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த கோவிலின் விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். இந்த கோவிலில் உள்ள 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

- Advertisement -

இங்கு “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இடதுபுறத்தில் உள்ள இதயத்தை குறிப்பதாகும். பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன.

28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 6 தூண்கள் உள்ளன அவை 6 சாஸ்திரங்களை கூறுகிறது. அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் 18 தூண்கள் உள்ளன. அவை சிவனடியார்களாகிய பதினெட்டு சித்தர்களைக் குறிப்பதாக உள்ளது.

- Advertisement -

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. இவை அனைத்தையும் தாண்டி, ஒட்டுமொத்த உலகின் மையப்புள்ளி இருக்கும் இடத்தில் தான் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைக்கட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து மெய்சிலிர்த்துபோயுள்ளனர்.

உலகத்தின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனம் CERN இந்த ஆராய்ச்சி நிறுவனமானது சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது. 27 கிலோ மீட்டர் பரப்பளவில் பெரிய அளவிலான இந்த ஆராய்ச்சி நிலையத்தில் எல்லா வகையான ஆராய்ச்சிகளும் நடக்கும். இந்த இடத்தின் நுழைவாயிலில் ஒரு நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? நடராஜர் சிலையை அந்த இடத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான விடையும் அந்த சிலைக்கு கீழேயே எழுதிவைத்துள்ளனர். காலத்தினால் கூட சொல்ல முடியாத பதில்களை இந்த நடராஜர் சிலை கூறுகின்றது.

நடராஜர் சிலையை சுற்றியுள்ள அந்த வளைவானது இந்த பிரபஞ்சத்தையும், அதில் பதிக்கப்பட்டுள்ள நெருப்பானது இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கும் என்பதையும், வலது கையில் இருந்து இடது கால் வரை அமைந்துள்ள நடராஜரின் உருவமானது அகில உலக அண்டத்தின் வடிவத்தையும், நடராஜரின் இடுப்பை சுற்றி உள்ள பாம்பு, காலம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதையும் குறிக்கிறது. இது மேற்கு நாட்டு விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் 2000 வருடத்திற்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது தான் ஆச்சரியம் அதிகமாகிறது.

இந்த ரகசியங்களை தாண்டி இன்னும் பல ரகசியங்கள் நடராஜர் கோவிலில் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த ரகசியங்கள் அனைத்தும் எப்போது வெளிவரும் என்பதை நடராஜர் மட்டுமே அறிவார்.

- Advertisement -