மேஷம்
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் வலுவின்றி இருந்தால் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டுவருவதாலும், சஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வழிபட்டாலும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஜாதகத்தில் சூரியன் வலுக்குன்றி இருந்தால் அதிகாலையில் சூரியனை வழிபடுவதும், குரு வலுவின்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும்.
ரிஷபம்
பரிகாரம்:
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். புதன் வலுவின்றி இருந்தால் புதன் கிழமைகளில் விஷ்ணுவை வழிபடலாம். சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுவதன் மூலம் பலன்களை பெறலாம்.
மிதுனம்
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். சுக்கிரன் வலுவின்றி இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பலன்களை பெறலாம். சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுவதன் மூலம் பலன்களை பெறலாம்.
கடகம்
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சந்திரன் வலுவின்றி இருந்தால் திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
சிம்மம்
சிம்ம லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே சற்று முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருக்கும் அவ்வளவு எளிதில் கட்டுப்பட மாட்டார்கள். தன்னுடைய சொந்த காலில் எப்போதும் நிற்கவேண்டும் என்ற எண்ணம் உடைய இவர்கள், நேர்மையாகவும் மற்றவர்களிடம் பெருந்தன்மையாகவும் நடந்துகொள்ளும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் சூரியன்.
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சூரியன் வலுவின்றி இருந்தால் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். செவ்வாய் வலுவின்றி இருந்தால், செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டுவருவதாலும், சஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வழிபட்டாலும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் வலுவின்றி இருந்தால் புதன் கிழமையன்று திருவெண்காடு சென்று புதபகவானை தரிசிப்பதன் பலனாக பல நன்மைகளை பெறலாம். சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுவதன் மூலம் பலன்களை பெறலாம்
துலாம்
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். புதன் வலுவின்றி இருந்தால் புதன் கிழமைகளில் விஷ்ணுவை வழிபடலாம். அதோடு திருவெண்காடு சென்று புதபகவானை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சற்று பிடிவாத குணம் கொண்ட இவர்கள் தன் வேலையில் கெட்டிக்கார தனத்தோடு செயல்படுவார்கள். ஒரு வேலையை தொடங்கினாள் அதை முடித்தே தீர வேண்டும் என்று கடைசிவரை போராடுவார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் செவ்வாய்.
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். குரு வலுக்குன்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும். அதோடு ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.
தனுசு
தனுசு லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே அனைவரிடத்திலும் கனிவோடு நடந்துகொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒழுக்கமுடையவர்களாகவும் தேவ பக்தி கொண்டவர்களாகவும் விளங்கும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் குரு.
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு வலுவின்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும். செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
மகரம்
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சனி வலுவின்றி இருந்தால் திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம். சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். புதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
கும்பம்
பரிகாரம்
ந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான சனி வலுவின்றி இருந்தால் திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம். சுக்கிரன் வலுவின்றி இருந்தால் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம்.
மீனம்
பரிகாரம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு வலுக்குன்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சார்த்தி வழிபடுவதும் நல்ல பலனை தரும். அதோடு ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும். செவ்வாய் வலுவின்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.