- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நாளை சித்திரை வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு

தமிழர்களின் வானியல் சாஸ்திரங்களின் படி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு வரும் மாதமே சித்திரை மாதம் எனப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் சிவனை வழிபடுவதற்குரிய சிறப்பு தினமாக சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினம் வருகிறது இந்தப் பிரதோஷ தினத்தில் சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

பல சிறப்புகள் நிறைந்த சித்திரை மாதத்தில் அனேகமாக அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற் கொள்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. அதிலும் மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் மங்களங்களை அதிகம் தரும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

- Advertisement -

சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பி-பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு மல்லிகை பூக்கள் சாற்றி, பச்சை பயறு மற்றும் பச்சை நிற இனிப்புகளை நைவேத்தியம் செய்து செய்து வணங்க வேண்டும்.

- Advertisement -

கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற சித்ரான்னங்களை அன்னதானம் வழங்குவது சிவபெருமானின் அருட்கடாட்சத்தை ஏற்படுத்தும். இம்முறையில் சித்திரை வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களின் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் நீங்கி வாழ்வில் வளமை பெருகும். திருமண தடை, குழந்தை பேறில்லாமை போன்ற குறைகள் நீங்கும். நவகிரகங்களில் புதன் பகவான் பெருமாளின் அம்சமாக இருப்பதால், அவரின் அருட்பார்வை உங்களுக்கு வாழ்வில் சுகங்கள், செல்வ சேர்க்கை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:
மனம் சம்பந்தமான குறைகள் தீர இங்கு செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chithirai valarpirai pradosham in Tamil. It is also called as Chithirai matham in Tamil or Pradosham valipadu in Tamil or Chithirai pradhosham in Tamil or Chithirai matha pradhoshangal in Tamil.

- Advertisement -