- Advertisement -

வீட்டில் இருக்கும் பீடைகள் அகன்று அதிர்ஷ்டம் பெருக இந்த ஒரு படத்தை உங்கள் வீட்டின் ஹாலில் மாட்டி வைத்தாலே போதும்

மனிதர்களாய் பிறந்த அனைவருமே காலம்காலமாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் இதுவரை யாரும் இறைவனை நேரில் கண்டதில்லை என்றாலும் மனித சக்தியையும் மீறிய ஒரு அற்புத சக்தி இருக்கின்றது என்ற நம்பிக்கையில் தான் மானிடராய் பிறந்த அனைவரும் அனைத்து வேலைகளையும் இறைபக்தியுடன் செய்கின்றோம். அந்த நம்பிக்கையினால் தான் கடவுள்களின் திரு உருவப் படங்களை வீட்டில் வைத்து வணங்கி வருகின்றோம். அதேபோல நேர்மறை அதிர்வுகளைத் தரக்கூடிய ஒருசில படங்களும் இருக்கின்றன. அவைகளை வீட்டில் மாட்டி வைப்பதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகிறது. அவ்வாறு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய படங்கள் என்னென்ன? அவற்றில் இருக்கும் அற்புத விஷயங்கள் என்ன? என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சூரிய பகவானின் வாகனமாகவும் சுக்கிரனின் வாகனமாகவும் இருப்பது வெள்ளை குதிரை தான். ஏழு குதிரை பூட்டிய வாகனத்தில் சூரிய பகவான் வலம் வறுகிறார். அதேபோல் சுக்கிரன் வெள்ளை நிறக் குதிரையில் வலம் வருகிறார். எவ்வாறு கஜமுக விநாயகருக்கு குதிரை முக்கியமானதோ அதுபோலதான் நம் வாழ்வில் செல்வம் சேர்வதற்கும் வெள்ளை குதிரை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

மகாலட்சுமியும் ஸ்ரீமன் நாராயணனும் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் மகாலட்சுமி தேவி சுக்கிரனின் வாகனமாக வெள்ளை குதிரையின் அழகை தன்னையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தான் பேசுவதைக் கவனிக்காமல் குதிரையைப் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த பெருமாள் மகாலட்சுமி தேவியை நீ வெள்ளை குதிரையாக போகக் கடவாய் என சாபம் அளித்தார்.

இதனால் மகாலட்சுமி வெள்ளை குதிரையாக பூமியில் பிறந்து வலம் வந்தார் என புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வெள்ளை குதிரை மகா லட்சுமியின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அவ்வாறு ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஒய்யாரமாய் வலம் வருகிறார் சூரிய பகவான். இவர் இன்பமான வாழ்விற்கு சுபிட்சத்தை அளிக்கிறார். அதுபோல் இல்லற வாழ்வில் இனிமை காண சுக்கிர பகவான் அருள் புரிகிறார்.

சுக்கிரனின் அருள் இல்லாமல் ஒருவருக்கு நல்ல மனைவியும், நல்ல கணவனும் கிடைப்பதில்லை. கணவன் மனைவி எந்தவித சண்டையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்வதற்கும் சுக்கிரனின் அருள் தேவைப்படுகிறது. ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணை மணந்து கொள் வதற்கும், ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணை மணந்து கொள்வதற்கும் சுக்கிரனை வணங்கி வர நல்ல பலன் உண்டாகும்.

இவ்வாறு கடவுள்களின் அருள் நிறைந்த வெள்ளைக்குதிரை இருக்கும் படத்தை, அதாவது ஒரு குதிரையாக இருந்தாலும் சரி, 7குதிரையாக இருந்தாலும் சரி அந்த படத்தை வீட்டின் ஹாலில் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் மாட்டி வைப்பதன் மூலம் நல்ல பலன் உண்டாகிறது. இதனால் வீட்டில் இருக்கும் தரிதிரம் ஒழிந்து நேர்மறை அதிர்வுகள் உண்டாகிறது. காலை எழுந்தவுடன் உள்ளங்கையை பார்ப்பது என்பது அஷ்டலட்சுமிகளின் அருளை நமக்கு அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதன்பிறகு இந்த குதிரைகள் இருக்கும் படத்தை பார்ப்பதனால் நமக்கு பேரதிர்ஷ்டம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகிறது.

- Advertisement -