- Advertisement -

கடன் கரைய அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

ஒவ்வொரு மாதமும் தான் அமாவாசை திதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் தான் கல்லுப்பு பரிகாரத்தை செய்கின்றோம். ஆனாலும் கடன் நம்மை விட்டு தொலைந்ததாக சரித்திரமே இல்லையே என்று கஷ்டப்படுபவர்களுக்கு, அந்த கடவுளே செவ்வாய்க்கிழமை அன்று அமாவாசை திதியை கொடுத்திருக்கின்றார். செவ்வாய்க்கிழமை என்றாலே கடனை திருப்பி அடைப்பதற்கு உகந்த நாள்.

அந்த நாளோடு அமாவாசை திதி சேர்ந்திருப்பதால், இந்த நாளில் நாம் செய்யக்கூடிய கல்லுப்பு பரிகாரம் நமக்கு பல மடங்கு பலனை தரும். நாளைய தினம் கடன் கரைய செய்ய வேண்டிய கல் உப்பு பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கடனை கரைக்கும் கல் உப்பு பரிகாரம்

வழக்கம்போல நாளை முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை எல்லாம் மறக்காமல் செய்து விடுங்கள். பிறகு கடன் சுமை குறைய வேண்டும் என்பதற்காக நாளைய தினம், செவ்வாய்க்கிழமை மதியம், செவ்வாய் ஹோரை நேரமான 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு உள்ளங் கைகளிலும் நிரம்பக் கல்லுப்பை எடுக்க வேண்டும். எடுத்து கல்லுப்பை கொஞ்சம் இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். அந்த கல்லுப்பு உங்களுடைய உள்ளம் கைகளில் லேசாக குத்த வேண்டும். கல்லுப்பின் அச்சு உங்களுடைய உள்ளங்கைகளில் படிய வேண்டும்.

- Advertisement -

அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து உப்பை உள்ளங்கைகளில் பிடித்துக் கொண்டு, இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்யுங்கள். என்னுடைய கடன் சுமையெல்லாம் சீக்கிரம் கரைந்து போக வேண்டும், கடனை அடைப்பதற்கு உண்டான வருமானம் அதிகரிக்க வேண்டும், என்ற பிரார்த்தனையை வைத்துவிட்டு, இந்த கையில் இருக்கும் கல் உப்பை அப்படியே கண்ணாடி டம்ளர் இருக்கும் தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும். உங்கள் கையாலேயே அந்த கல்லுப்பை நன்றாக கரைத்து விடுங்கள்.

முதலில் இடது கையில் இருக்கும் கல் உப்பை போட்டு கரையுங்கள். பிறகு வலது கையில் இருக்கும் கல் உப்பை போட்டு கரையுங்கள். இந்த கல்லுப்பு தண்ணீரில் எப்படி கரைகிறதோ, அதேபோல என்னுடைய கடன் சுமை கரைந்து போக வேண்டும் என்று உண்மையான நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்து முழு மனதோடு இந்த பரிகாரத்தை, நாளை நீங்கள் செய்தீர்கள் என்றால், உங்கள் கடன் சுமை காணாமலேயே போய்விடும்.

- Advertisement -

குடும்பத் தலைவன் தலைவி யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆனால் நம்பிக்கைதான் முழு மூலதனம். நம்பிக்கை இல்லாமல் கல் உப்பை எடுத்தும் தண்ணீரில் போட்டும் என்று செய்தால் பலனை உங்களால் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. கல்லுப்பை கையில் வைத்துக் கொண்டு செய்யக்கூடிய வேண்டுதல் 100% பலிக்கும்.

நாளை செவ்வாய்க்கிழமை இருக்கிறது. அமாவாசை திதி இருக்கிறது. முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிரபஞ்சம் முழுவதும் இறை சக்தி நிறைந்திருக்கிறது. அந்த நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்களை விட பாக்கியசாலி இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: 07-05-2024 பண வசியம் ஏற்பட அமாவாசை பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு கையோடு நீங்கள் யார்கிட்ட கடன் வாங்கி இருக்கீங்களோ, அவங்களுக்கு ஒரு தொகையை திருப்பிக் கொடுக்கணும். Gpay பண்ணா கூட தவறு இல்லை. அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை கவரில் அந்த நபரின் பெயரை எழுதி, அந்த கவரில் 100 ரூபாயை போட்டு வையுங்கள். அந்த நபருக்கு கடனை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தம். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -