- Advertisement -
மந்திரம்

கடன் தீர்க்கும் குபேர மந்திரம்

ஒரு மனிதனுடைய நிம்மதியை குலைக்கக் கூடியவற்றில் முதன்மையான இடத்தை பெறுவது கடன் தான். கடன் பட்டவர்கள் தினம் தினம் அடையும் துன்பத்தை நம்மால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த கடனே பலவகையில் உண்டு. அவசர தேவைக்காக கடன் வாங்குபவர்களும் உண்டு. வீண் ஆடம்பரத்திற்காக வாங்குபவர்களும் உண்டு. வீண் ஆடம்பரத்திற்காக வாங்குபவர்கள் இந்த கடனால் துன்பப்பட்டால் நாம் அதற்காக பெரிதும் வருத்தப்பட தேவையில்லை என்றே சொல்லலாம்.

வேறு வழி இல்லாமல் மருத்துவ செலவிற்கோ, படிப்பு, குடும்பத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் துன்பப்படுபவர்களின் நிலையை நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கடனை அவர்கள் அடைத்து அதிலிருந்து மீண்டு வர வேண்டும் எனில் நிச்சயம் அதற்கான வருமானம் வேண்டும். இவை இரண்டையும் ஒரு சேர தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கடன் அடைய குபேர மந்திரம்

குபேரரின் அருளை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. பணத்திற்கான அதிபதி. செல்வத்தை வாரி வழங்குபவர். இவரை நினைத்து வணங்கினால் தெருக்கோடியில் இருப்பவர் கூட கோடீஸ்வரனாக ஆகி விடுவார். இப்படியாக இவருடைய பெருமைகள் பல வகையாக நாம் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த குபேரரை நினைத்து சொல்லப்படும் இந்த ஒரு மந்திரம் நம்முடைய கோடான கடனையும் அடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மந்திரத்தை சொல்ல நாம் பூஜை புனஸ்காரங்கள் எதையும் செய்ய வேண்டியது கிடையாது. ஏன் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து கூட சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்திலே குபேர நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் போதும்.

- Advertisement -

ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி
தந்தோ குபேர ப்ரசோதயாத்

என்ற இந்த மந்திரத்தை வியாழக்கிழமை அன்று மாலை 5:30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக வடக்கு நோக்கி நின்று 21 சொல்ல வேண்டும். ஒரு வேளை நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள் என்றால் அங்கேயே அமர்ந்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து 21 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சங்கடங்களை தீர்க்கும் சங்கரத்தாழ்வார் மந்திரம்

இவ்வளவு தான் இந்த மந்திரத்தை சொல்வதற்கான விதிமுறைகள். வியாழக்கிழமை வடக்கு திசை நோக்கி 21 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்களுக்கு பணவரவு அதிகரித்து கடன் அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குபேரின் அற்புதமான இந்த மந்திர வழிபாட்டை கடன் அவதிப்படும் அனைவரும் சொல்லி கடன் என்னும் அரக்கனை பிடியிலிருந்து வெளிவருவதற்கான வழியைத் தேடிக் கொள்ளலாம் என்ற இந்த அற்புதமான தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -