சங்கடங்களை தீர்க்கும் சங்கரத்தாழ்வார் மந்திரம்

chakkarathazhvar manthiram
- Advertisement -

சங்கரத்தாழ்வார் நாம் அனைவரும் கேள்விப்பட்ட தெய்வம் தான். ஆனால் இவரின் பெருமைகள் யாருக்கும் அவ்வளவு தெரியாது. இவர் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் சொரூபமாக பார்க்கப்படுகிறார். அதுமட்டுமின்றி இவருக்கு சுதர்சனர், திகிரி, திருவாழியாழ்வான், சக்கரம், என்ற பெயர்களும் உண்டு. இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் இருக்கிறார். பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி கட்டாயம் இருக்கும்.

பெருமாளின் நரசிம்ம அவதாரத்தில் அவரின் கை நகங்களாக இருந்தவர் தான் இந்த ஸ்ரீசுதர்சனர். இவர் வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் தர்ப்பை வடிவத்தில் குத்தி காயப்படுத்தியவர் என்று புராணங்கள் கூறுகிறது.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் அனைத்து அவதாரங்களிலும் உடன்யிருந்து தீமைகளை அழித்தவர் தான் சுதர்சனர் எனும் சக்கரத்தாழ்வார். இந்த சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரின் அற்புதமான மந்திரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

ஆபத்தை தடுக்கும் மந்திரம்

விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழியை பலரும் அறிந்த ஒன்று தான். ஆனால் விதியை மந்திரத்தால் மாற்றலாம் என்ற இந்த புதிய மொழியை உணர்த்தும் அற்புதமான மந்திரம் சக்கரத்தாழ்வாரின் இந்த மந்திரம். இந்த மந்திரத்தின் பலன்களை வெறும் வார்த்தைகளால் உச்சரிக்க முடியாது. அதை அனுபவிப்பர் மட்டுமே உண்மையாக உணர முடியும். அது என்ன மந்திரம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓம் சகஸ்ராய உம் பட்

என்ற இந்த மந்திரத்தை நீங்கள் வெளியில் கிளம்பும் போது மூன்று முறை சொல்லி விட்டு அதன் பிறகு செல்லுங்கள். இந்த மந்திரம் வேண்டுமானால் ஒற்றை வரியில் சிறியதாக இருக்கலாம். இந்த மந்திரத்தின் பலன் மிகப் பெரியதாக இருக்கும். திருமாலின் அவதாரங்களில் அனைத்து தீமைகளையும் அழிக்க உடன் இருந்த இந்த சங்கரதாழ்வாரின் மந்திரம் உங்களையும் எந்த தீமையும் நெருங்க விடாமல் காக்கும். இது தான் இந்த மந்திரத்தின் மிகப்பெரிய பலன்.

- Advertisement -

ஒருவருக்கு வெளியில் செல்லும் போது ஏதேனும் விபத்து அல்லது அசம்பாவிதம் நடக்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த மந்திரத்தை சொல்லி விட்டு வெளியில் சென்றால் அது தடுக்கப்பட்டு விடும். அதே போல் உங்களை யாராவது வீழ்த்த வேண்டும் உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என நினைத்து உங்கள் முன்னே வந்து நின்றால் இந்த மந்திரத்தின் பலனாக அவர் உங்களிடமே அடிபணிந்து சென்று விடுவார்.

இந்த மந்திரத்தை தினம் தினம் உச்சரிப்பவரின் வாழ்க்கையில் எந்தவித அசம்பாவிதங்களும் அத்தனை எளிதில் நடக்க விடாது என்று சொல்லப்படுகிறது. நம்முடைய சான்றோர்கள் எல்லா தெய்வத்தின் வழிபாட்டையும் மந்திரத்தை பிணைந்தே நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். ஒரு தெய்வத்தை நாம் பலமுறை வணங்குவதற்கு அந்த தெய்வத்தின் மந்திரத்தை ஒரு முறை சொன்னால் அதற்கான பலன் பல மடங்கு கிடைக்கும் என்பது தான்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீடு தேடி வர பரிகாரம்

சங்கரத்தாழ்வாரின் இந்த மந்திரங்கள் குறித்த அற்புதத்தை இந்த பதிவின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் இந்த தகவலில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்லி உங்களுக்கு நேர இருக்கும் துன்பத்தை எல்லாம் நேராமல் தடுத்து நல்ல முறையில் வாழலாம்.

- Advertisement -