- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இந்த மந்திரத்தை சொல்லி இந்த ஒரு பொருளை தானமாகக் கொடுத்தால் கழுத்தை நெரிக்கும் கடன்பிரச்சனையும் எளிதில் தீர்ந்து விடும்

மனிதனின் ஆயுட்காலம் 100 வருடம். பிறந்தது முதல் 20 வயது வரை பெற்றோர்களின் அரவணைப்பில் வாழ்கிறோம். இதற்குப் பிறகுதான்வாழ்க்கையயின் போராட்டம் ஆரம்பிக்கிறது. படிப்பைமுடித்தது, அதற்கான சரியான வேலை கிடைத்து, நாம் வாங்கும் சம்பளம் நிறைவாக இருந்தது என்றால் வாழ்க்கை ஒரு அளவிற்கு நிம்மதியாக இருக்கும். ஆனால் போதிய சம்பளம் இல்லாமலும், வருமானத்தை மீறிய செலவுகள் இருந்தாலும் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வோம். அவ்வாறு பலரும்மாட்டிக்கொண்டடு அவஸ்தைப்படும் ஒரு விஷயம்தான் பிறரிடம் கடன் வாங்குவது. அவ்வாறு கடன் வாங்கி பிரச்சனையில் அவதிப்பட்டு கொண்டிருப்போர் பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுப்பதன் மூலம் அதிலிருந்து எளிதில் விடுபட முடியும். வாருங்கள் அது என்ன பொருள் இதனை எவ்வாறு தானம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொளள்வோம்.

ஒரு சிலர் அவசர தேவைக்காகவும், முக்கியமான சூழ்நிலையை சமாளிப்தற்காகவும் கடன் வாங்குவார்கள். அதுபோல வாழ்ந்து கெட்டவர்கள் என்றுசிலரரைகூறுவவோம். அவ்வாறு அவர்களும் அவர்களின் தேவைக்காக கடன் வாங்குவார்கள். இவ்வாறு கடன் வாங்கி அதனை திருப்பிக் கொடுக்காமல் போனால் மன நிம்மதி இல்லாமல் உறக்கம் இல்லாமல் அவஸ்தைப் பட்டுகொண்டிருப்பார்கள்.

- Advertisement -

இந்தக் கடன்களை எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று என்ன தான் முயற்சித்தாலும் ஒரு சில சமயங்களில் அதனை சரியாக செய்ய முடியாது. இதற்கு காரணம் நாம் கடன் வாங்கிய நேரம் கெட்ட நேரமாகவும் இருக்கலாம். அல்லது நமக்கு கடன் கொடுத்தவரின் நல்ல நேரமாகவும் இருக்கலாம்.

நல்ல காரியங்கள் செய்வதற்கு மட்டும் நேரம் காலம் பார்க்க வேண்டும் என்பது கிடையாது. இவ்வாறு கடன் வாங்குவதாக இருந்தாலும் அதற்கும் முக்கியமாக நேரத்தை பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சரியான நேரத்தில் வாங்கிய கடன்களை எளிதாக திருப்பிக் கொடுக்கலாம். அதுபோல கடன் திருப்பிக் கொடுப்பதாக இருந்தாலும் மைத்ரய முகூர்த்த நேரத்தில் சிறு தொகையை திருப்பிக்கொடுத்தாலலும் உங்கள் கடன் விரைவில் அடையும்.

- Advertisement -

கடன் அடைய பரிகாரம்:
பாசிப்பருப்பு, வெள்ளம் மற்றும் பால் சேர்த்து பாயாசம் செய்து அதனை பூஜை அறையில் வைத்து ” ஓம் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே ” என்னும் மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தது, இந்த பாயசத்தை பசுமாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும். பசுமாடு அதனை உண்ணும் பொழுது நமது மனதில் எனது கடன்கள் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் இதனை பசுமாட்டிற்கு தானமாக கொடுத்து வந்தால் உங்கள் படங்கள் அனைத்தும் விரைவாக அடையும் அல்லது உங்கள் கடன் அடைவதற்கான ஏதுவான வழி கிடைக்கும். எனவே இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து உங்கள் கடன் அடைய மனதார இறைவனை வேண்டி இந்தப் பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
மகாலட்சுமி நித்யவாசம் செய்யும் இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டால் நமது வீட்டிலலும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்

- Advertisement -