- Advertisement -

கடன் பிரச்சனையை தீர்க்க தீப வழிபாடு

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சுடுகின்ற நெருப்பை அள்ளி நம் மீது கொட்டியது போல ஒரு உணர்வு இருக்கும். எமன் வருகையை பார்த்து கூட சில பேர் பயப்பட மாட்டார்கள். ஆனால் கடனை கொடுத்தவர்கள், அந்த கடனை திருப்பிக் கேட்க வராங்க, அப்படின்னு தெரிஞ்சாலே போதும்.

நம்முடைய உடம்பு மனது எல்லாமே பதறிப் போய் விடுகிறது. ஏனென்றால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு பிரச்சனை செய்யும்போது, அந்த பணத்தை நம்மால் திருப்பிக் கொடுக்க முடியாத போது ஏற்படக்கூடிய அவமானம், அதை எந்த மனிதர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாது. உங்களுக்கும் தீர்க்க முடியாத கடன் பிரச்சனை இருக்கிறதா.

- Advertisement -

வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை இந்த விளக்கை வீட்டில் ஏற்றி கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக சுட்டெரிக்கும் கடன் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.

கடன் பிரச்சனையை தீர்க்கும் தீப வழிபாடு

தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யாதவர்கள் கூட வாரம்தோறும் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை என்றால் பூஜை அறையில் கட்டாயம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். அப்போது ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அந்த விளக்கில் போடும் திரியோடு வெட்டிவேரை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

விளக்குத்திரி சைசுக்கு வெட்டிவேரை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வெட்டிவேரையும் விளக்கு திரையையும் ஒன்றாக வைத்து திரித்துக் கொண்டு, அந்த திரியை விளக்கில் போட்டு தீபம் ஏற்றி வைக்கும் போது இதிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். வெட்டி வேருக்கு நம் உடம்பை குளிர்ச்சி செய்யக்கூடிய தன்மை இருக்கிறது. வெட்டிவேரை வைத்திருக்கக்கூடிய இடமும் குளிர்ச்சி நிறைந்த இடமாக இருக்கும். அதே போல இந்த வெட்டிவேர் இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல் தங்காது, கடன் பிரச்சனையும் இருக்காது.

வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் இப்படி விளக்கு ஏற்றி அந்த விளக்குக்கு முன்பாக சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி, கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துப் பாருங்கள். உங்கள் வருமானம் உயரும். செல்வ செழிப்பு உயரும். கடன் பிரச்சனை படிப்படியாக குறைவதை கண்கூடாக காணலாம்.

- Advertisement -

அத்தனை சக்தி வாய்ந்த வழிபாடு இது. அதேபோல எப்போதுமே ஒரு வீட்டு பூஜை அறையில் வெட்டிவேர் இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு கிண்ணத்தில் வெட்டிவேரை போட்டு திறந்தபடி வையுங்கள். அதனுடைய வாசம் வீடு முழுவதும் நிரம்பி இருப்பது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

கடன் தீர மேலே சொன்ன வழிபாடு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பரிகாரத்தையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு சிதம்பரம் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், அங்கு சென்று நடராஜரை தரிசனம் செய்யுங்கள். அந்த நடராஜர் தனது இடது காலை தூக்கி நடனம் ஆடுவது போல காட்சி அளிப்பார்.

அந்த இடது பாதத்திற்கு கீழே குஞ்சிதபாதம் என்ற, மூலிகையால் செய்யப்பட்ட ஒரு பொருள் வைக்கப்பட்டிருக்கும். அந்த மூலிகை பொருள் உங்களுக்கு கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. அந்த மூலிகை பொருட்களில் வெட்டிவேரும் சேர்க்க பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜர் பாதத்தில் வைத்த அந்த வெட்டிவேரால் செய்யப்பட்ட குஞ்சிதபாதம் உங்களுக்கு கிடைத்தால், நீங்க ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி.

இதையும் படிக்கலாமே: அட்சய திருதி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

அதை வாங்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தாலும், உங்களுக்கு கடன் இல்லாத செல்வ செழிப்பான வாழ்க்கை கிடைக்கும் என்பதும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம். அந்த பொருளை வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை எல்லாம் பின்பற்றி கடன் இல்லாமல் வாழ இறைவனிடம் வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -