- Advertisement -

குழந்தைகள் நன்றாக படிக்க அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது

இந்த வருடத்தின் அட்சய திருதியை ஆனது நாளைய தினம் வரவிருக்கின்றது. 10/5/2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை. இந்த நாளில் கஜகேசரி யோகமும் இணைந்திருப்பதால் இரட்டிப்பு சிறப்பு இருக்கிறது. எல்லோருக்கும் புரியும் படி சொன்னால் கஜகேசரி யோகம் என்பது அதிர்ஷ்டத்தை பல மடங்கு வாரி கொடுக்கும் யோகமாகும்.

உங்களுடைய வீட்டில் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் நாளைய தினம் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பிள்ளைகள் நன்றாக படிக்க

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் அரச மரத்து இலை. கொஞ்சம் சுத்தமான மஞ்சள் தூள். மஞ்சளை தண்ணீரில் குழைத்து, அதை வலது கை ஆள் காட்டி விரலால் தொட்டு, ஒரு அரச மரத்து இலையில், ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார பிரார்த்தனை செய்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

உங்களுடைய பிள்ளை ரொம்பவும் சின்ன குழந்தையாக இருந்தால், இதை பெற்றவர்கள் செய்யலாம். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால் அவர்கள் கையாளியை அரச மரத்து இலையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய சொல்லி நன்றாக படிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய சொல்லுங்கள். அந்த இலையில் வரையப்பட்டிருக்கும் மஞ்சளின் ஈரம் கொஞ்சம் காய்ந்த பிறகு, இந்த இலையை அப்படியே கொண்டு போய் புத்தகம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

வீட்டில் புத்தகம் வைக்கும் அலமாரியிலும் இந்த இலையை வைக்கலாம், அல்லது குழந்தைகள் புத்தகத்தை வைத்திருக்கும் பையிலும் இந்த இலையை வைக்கலாம். நாளைய தினம் அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பாடத்தை எடுத்து இரண்டு வரி படிக்கச் சொல்லுங்கள். அவர்களுடைய படிப்பு மேலும் மேலும் உயர அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.

நாளைய தினம் பூஜையறையில் விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை காலை 10:30 மணிக்கு முன்பாகவே செய்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்கள் கழித்தோ, ஐந்து நாட்கள் கழித்தோ அந்த இலை ரொம்பவும் வாடிய பிறகு எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம் தவறு ஒன்றும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: உங்க ராசிப்படி அட்சய திரிதிக்கு என்ன பொருள் வாங்கலாம்?

அட்சய திருதியை அன்று, தங்கம் வாங்குவது எவ்வளவு சிறப்போ, வெள்ளி வாங்குவது எவ்வளவு சிறப்போ, அதைவிட பல மடங்கு சிறப்பானது படிக்கின்ற பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய இந்த பரிகாரம். நாளைய தினத்தை தவற விடாதிங்க. பிள்ளைகளின் படிப்பில் அக்கறை உள்ளவர்கள் நிச்சயம் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -